இளைஞர்களுக்கு . வேலை வாய்ப்பு பயிற்சி, உலக தரம் வாய்ந்த மருத்துவமனை, அதி நவின ஸ்மார்ட் பள்ளி, ஸ்டெர்லைட்டின் 6 - மக்கள் நல திட்டங்கள்
11-01-2019 தூத்துக்குடி மக்களுக்காக வரவிருக்கும் மாதங்களில் பெரியஅளவிலான வளர்ச்சிசெயல் திட்டங்கள் பல தொடங்க விருப்பதை " ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அறிவித்திருக்கிறது. ரூபாய் 100 / கோடி மதிப்பில் திட்டமிடபட்டிருக்கிற இந்த முதலீட்டில் கீழ் செயல்படவிருக்கும் திட்டங்களில், தூத்துக்குடி மாநகரின் முன்னேற்றம் மற்றும், புத்துயிர் பெற்ற வளர்ச்சியை, முடுக்கி விடுவதை இலக்காக கொண்ட பல் வேறு முனைப்பு திட்டங்கள், உள்ளடங்கும் . தொழில் துறை மற்றும் பொதுமக்கள் ஆகிய இரு தரப்பின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு புதிய ஸ்மார்ட் பள்ளி, உலகத்தரம் வாய்ந்த ஒரு மருத்துவமனை, கடல்நீரை தூய்மையாக்கி குடிநீராக்கும் ஆலை, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொழில் முனைவு திறன் ஆகியவற்றின் மீது சிறப்புகவனம்.செலுத்தும் , இளைஞர் மேம்பாடு. திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. தூத்துக்குடி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள...