திருச்செந்தூரில் இருந்து உவரி, நாகர்கோயில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு புதிய வழித்தட பேருந்து துவக்கம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து உவரி, நாகர்கோயில், கன்னியாகுமரி புதிய வழித்தட பேருந்துகளை மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ------------------------------ தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் திருச்செந்தூரில் இருந்து உவரி, நாகர்கோயில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு புதிய வழித்தட பேருந்து துவக்க நிகழ்ச்சி இன்று (10.07.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு 5 புதிய வழித்தட பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, பெரியதாழை பேருந்து நிலையத்தில் இருந்து உடன்குடிக்கு நகர பேருந்தினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசியதாவது: மாண்பும...