முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 2, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம்  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில் ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் --------------------- தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.23.04 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மரு.கி. செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:  தூத்துக்குடி மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 2812 எக்டேர் பரப்பளவிற்கு ரூ.23.04 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் 1 ஏக்கர் முதல் அதிகபட்சம் 5 ஏக்கர் வரை பயன்பெறலாம். இதர விவசாயிகள் 12.5 ஏக்கர் வரை நிலத்தில் சொட்டுநீர் பாசம் அமைத்துக்கொள்ளலாம். நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஆழ்துறை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம், டீசல் மோட்டார் அல்லது மின் மோட்டார் அமைத்திட ரூ.15 ...

மணியாச்சி கிருஷ்னா நகர் பகுதியில் 10.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டிட திறப்பு. .

தூத்துக்குடி மாவட்டம் கே.மணியாச்சி கிருஷ்ணா நகர் பகுதி நேர நியாய விலைக்கடைக்கு ரூ.10.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தினை மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் திறந்து வைத்தார்.  ----------------- தூத்துக்குடி மாவட்டம் கே.மணியாச்சி கிருஷ்ணா நகர் பகுதி நேர நியாய விலைக்கடைக்கு ரூ.10.35  லட்சம் மதிப்பில் கdட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (30.06.2021) நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தினை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார். இவ்விழாவில் கோவில்பட்டி சட்;டமன்ற உறுப்பினர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் முன்னிலை வகித்தார்.                                                               ...