முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 3, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இல்லம் தேடி கல்வி மையங்கள் துவக்கி வைப்பு

  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலம் இல்லம் தேடி கல்வி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள் ---------------------------- தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலம் இல்லம் தேடி கல்வி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள்  (03.01.2022)     அன்றுதுவக்கி வைத்தார்கள். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.  பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட கற்றல் இழப்பினை சரிசெய்வதற்காகவும் கற்றல் இடைவெளியை போக்குவதற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் கொண்டு வந்துள்ள திட்டம்தான் இல்லம் தேடிக் ...

பொங்கல் பரிசுத்தொகுப்பு: கண்காணிக்க கண்காணிப்பு குழு

பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 04.01.2022 முதல் 1 கிலோ - பச்சரிசி, 1 கிலோ - வெல்லம், 50 கிராம் - முந்திரி, 50 கிராம் - திராட்சை, 10 கிராம் - ஏலக்காய், 500 கிராம் - பாசிபருப்பு, 100 கிராம் - நெய், 100 கிராம் - மஞ்சள்தூள், 100 கிராம் - மிளகாய் தூள், 100 கிராம் - மல்லித்தூள், 100 கிராம் - கடுகு, 100 கிராம் - சீரகம், 50 கிராம் - மிளகு, 200 கிராம் - புளி, 250 கிராம் - கடலைபருப்பு, 500 கிராம் - உளுத்தம்பருப்பு, 1கிலோ - ரவை, 1 கிலோ - கோதுமைமாவு, 500 கிராம் - உப்பு, ஒரு துணிப்பை மற்றும் ஒரு கரும்பு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு வழங்கிட தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.   அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 04.01.2022 பொங்;கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மின்னணு குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் மட்டும் நியாய விலைக்கடைக்கு சென்று தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்து பொங்...