முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 18, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தருவைக்குளம் காவல் நிலைய காவலர் சாலை விபத்தில் காலமானர்

  தூத்துக்குடி மாவட்டம்,  தருவைக்குளம் காவல் நிலைய காவலர் கனகவேல்;  அவர்கள் சாலை விபத்தில்   16-07-2021  அன்று காலமானார். அன்னாரது உடலுக்கு   தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  தருவைக்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் திரு. கனகவேல் (26) அவர்கள், அவரது சொந்த ஊரான சூரங்குடி அருகேயுள்ள தங்கம்மாள்புரத்திற்கு பைக்கில் சென்றுவிட்டு, தருவைக்குளம் காவல் நிலையத்திற்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வடக்கிலிருந்து தெற்காக திரும்பி வரும்போது பாலார்பட்டி விலக்கில் வந்தபோது எதிரே வந்த டாட்டா ஏஸ் என்ற வாகனம் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 17.07.2021 அன்று அவரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  அவரை தொடர்ந்து தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்...

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் ஆய்வு

  தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். ---------------------------- தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் இன்று (17.07.2021) ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின்போது சமூக நல இயக்குநர் திருமதி.டி.ரத்னா, இ.ஆ.ப., அவர்கள், சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் திருமதி.எஸ்.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.                தூத்துக்குடி ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு பாதிக்கப்பட்ட மகளிருக்கு ஆலோசனைகள் கூறும் பகுதிகளையும், தங்கும் பகுதிகளையும் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து அடைக்கலாபுரம் செயின்ட் ஜோசப் அறக்கட்டளையில் புனித சூசையப்பர் மழலையர் இல்லத்தில் உள்ள 1 வயதுக்கும் கீழ...

சமூக நலத்துறை மண்டல அளவிலான ஆய்வு கூட்டம்

  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது  ------------------------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில் இன்று (17.07.2021) நடைபெற்றது. கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அரசு முதன்மை செயலாளர் திரு.ஷம்பு கல்லோலிகர், இ.ஆ.ப., அவர்கள், சமூக நல இயக்குநர் திருமதி.டி.ரத்னா, இ.ஆ.ப., அவர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் இயக்குநர் திருமதி.வி.அமுதவல்லி, இ.ஆ.ப., அவர்கள்  சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் திருமதி.எஸ்.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள்   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் உங்கள் த...