முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 18, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண தொகை : மற்றும் தையல் இயந்திரம்

        தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகள் 123 நபர்களுக்கு கொரோனா நிவாரண நிதி தலா ரூ.2000 மற்றும் 10 நலிவடைந்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களையும் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள்  வழங்கினார். ------------------------ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலத்துறையின் சார்பில் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த கொரோனா நிவாரணத்தொகை ரூ.2000 வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் இன்று (18.06.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள்  கலந்துகொண்டு, 123 நபர்களுக்கு கொரோனா நிவாரண நிதி தலா ரூ.2000 மற்றும் 10 நலிவடைந்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களையும் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக ந...

கால்நடைகளுக்கு காப்பிடு செய்து, பயன் பெறலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

  தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் தங்களிடம் உள்ள கால்நடைகளுக்கு  தேசிய கால்நடை குழுமம் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பயன் பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப, அவர்கள் தகவல்  தமிழக அரசின் கால்நடை காப்பீடு திட்டமானது கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை இறப்பதினால் ஏற்படும் நஷ்டங்களில் இருந்து பாதுகாக்கவும,; கால்நடை காப்பீட்டின் நன்மைகளை விளக்கும் பொருட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-2021ஆம் ஆண்டிற்கான தேசிய கால்நடை குழுமம் திட்டத்தின் கீழ் கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு 1500 கால்நடைகளுக்கு காப்பீடு செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  கால்நடை வளர்ப்போர் தங்களிடம் உள்ள கால்நடைகளை ஒரு வருடம் அல்லது முன்று வருடங்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு பசு, ஒரு எருமை, பத்து எண்ணிக்கை கொண்ட வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வைத்து இருப்பவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். ஒரு நபர் ஐந்து கால்நடை இனங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்து கொள்ளலாம். கறவைப்பசு, எருமை இவ்வினங்கள்...

அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கம் மற்றும் ரிலையன்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் நல உதவிகள்

                                                                         கொரோனா இரண்டாவது அலை காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் சிரமத்திற்கு உள்ளான நிலையில் பல்வேறு விதமாக அரசு மக்களுக்கு நிதி வழங்கியும் ரேஷன் பொருள்கள் வழங்கியும் மக்களின் துயர் துடைத்து வருகின்றன இருந்தும் மக்கள் தங்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பல்வேறு தொண்டு நிறுவனமும் சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த சேவைகளை செய்து வருகின்றனர்                                                                                                                     ...