சாயர்புரம் பகுதியில் புதிய சி சி டி வி கேமிரா - தூத்துக்குடி மாவட்ட காவல் துறை எஸ்.பி திரு ஜெயக்குமார் திறந்து வைப்பு
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்றாவது கண் எனப்படும் சி.சி.டி.வி கேமராவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தூத்துக்குடி, சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலை மற்றும் மஞ்சள்நீர்காயல் ஆகிய பகுதிகளில் முக்கிய இடங்களில் 19 சி.சி.டி.வி கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. சாலை பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 7 சி.சி.டி.வி கேமராக்களை பேய்குளம் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்திலும், மஞ்சள்நீர்காயலில் புதிதாக அமைக்கப்பட்ட 12 சி.சி.டி.வி கேமராக்களை மஞ்சள்நீர்காயலில் உள்ள காமராஜர் மாளிகையிலும் இன்று (16.10.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த சி.சி.டி.வி கேமராக்கள் பேய்க்குளம் ஆர்ச் அருகில் 3 கேமராக்களும், பழைய காயல் ரோடு ஜங்ஷன் பகுதியில் 3 கேமராக்களும் மற்றும் சாலை ரோடு பகுதியில் 1 கேமராவும் ஆக மொத்தம் 3 இடங்களில் 7 கேமராக்களும், மஞ்சள்நீர்காயலில் மஞ...