முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 29, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடிகளில். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

                                                                                     தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடிகளில் நடைபெறும் போலீசாரின் வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்;. கொரோனா 2வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த  24.05.2021 முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்து வருகிற 07.06.2021 அன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே  சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றி...

ஸ்டெர்லைட் ஆலையில் 23.12 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி

       ஸ்டெர்லைட் ஆலையில் 23.12 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி - ஆட்சியர் தகவல்.   29.05.2021  சளி கிழமை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 23.12 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : உச்சநீதி மன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலுள்ள ஆக்ஸிஜன் அலகு திறக்கப்பட்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணிதுவங்கியது. மாவட்டஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 23.12 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு 5.70 மெட்ரிக் டன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிஇ மருத்துவமனைக்கும் 5.76 மெட்ரிக் டன் நாமக்கல் ஸ்ரீலெட்சுமி ஆக்ஸிஜன் நிறுவனத்திற்கும் 0.58 மெட்ரிக் டன் தூத்துக்குடி அரசன் கேஸ் ஏஜென்சீஸ் நிறுவனத்திற்கும்  0.08 மெட்ரிக் டன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி ருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித...

கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பாக திருநங்கைகள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு பை வழங்கல்

     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பாக இன்று  கோவில்பட்டி லட்சுமி திருமண மஹாலில் வைத்து திருநங்கைகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.  ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமி திருமண மஹாலில் வைத்து இன்று (28.05.2021) திருநங்கைகள் மற்றும்  ஏழை எளிய மக்கள் 110  பேருக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.  அப்போது அவர் பேசுகையில் கொரோனா 2வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த  24.05.2021 முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்து வருகிற 07.06.2021 அன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த காலம் மிகவும் சிரமமாக இருக்கும். இதனை பொறுத்துக் கொண்டு...

நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ,  தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் திரு.பனிந்திர ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். --------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் திரு.பனிந்திர ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.05.2021) ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்தும், இதில் ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகள், ஐ.சி.யு. படுக்கை வசதிகள் குறித்தும், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் கொரோனா பாதுகாப்பு மையங்கள், சித்த மருத்துவ கொரோனா பாதுகாப்பு மையங்கள் குறித்தும் அரசு மற்றும் இங்குள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், திரவ ஆக்சிஜன் வழங்குவது குறித்தும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழு குறித்தும் தெரிவித்தார்கள். மேலும...