தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை . தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையாக சித்த மருத்துவ கண்காட்சி மற்றும் ஆயுதப்படை காவல் ஆளிநர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட சித்த மருத்துவமனை சார்பாக சித்த மருத்துவ கண்காட்சி மற்றும் ஆயுதப்படை காவல் ஆளிநர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று (31.12.2020) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தவர்கள் மருத்துவதுறையினர், அதிலும் சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்...