.ரூ 8 லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரி கரை பலப்படுத்தும்; பணிகள் . மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைப்பு
குலையன்கரிசல் ஊராட்சியில் இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் தூத்துக்குடி சமூக பொறுப்பு நிதி ரூ8லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரி கரை பலப்படுத்தும்; பணிகளை ளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி , இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குலையன்கரிசல் ஊராட்சியில் இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் தூத்துக்குடியின் சமூக பொறுப்பு நிதி ரூ.8 லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரி கரை பலப்படுத்தும் பணிகள் துவக்க நிகழ்ச்சி இன்று (31.07.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு, கண்மாய் வடிகால் வாய்க்கால் தூர்வாரி கரை பலப்படுத்தும் பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடிமராத்து திட்டம் என்ற அற்புதமான திட்டத்தினை தமிழகம் முழுவது...