முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 6, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

97 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் : சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் வழங்கினார்.

  தூத்துக்குடி டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் 97 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்கள் வழங்கினார்.  ---------------- தூத்துக்குடி டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் 97 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (06.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு ரேசன் கார்டுகளை வழங்கினார்.  பின்னர் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்கள் தெரிவித்ததாவது:           தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் கடந்த ஜனவரி முதல்  ஜூன் வரை குடும்ப அட்டைகள் விண்ணப்பித்ததில் 22.7.2021 அன்று 4566 நபர்களுக்கு புதிய குடும்ப ...

தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி தேவைபடும் மூத்த குடிமக்கள், தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண . . இலவச தொலைபேசி எண்-14567 மாவட்ட ஆட்சியர் தகவல் .:

  தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி தேவைபடும் மூத்த குடிமக்கள்; கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்-14567 மூலம்; மாவட்ட சமூகநல அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் - மாவட்டஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் -----------------------------       மூத்த குடிமக்களை காக்கும் பொருட்டு தேசிய மூத்த குடிமக்கள்  உதவி எண்: 14567 புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்க்கையில் எழும் பிரச்சனையில் இருந்து விடுபட, தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள, கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்-14567-சமூகநீதி மற்றும் உரிமைத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி N;தவைபடும் மூத்த குடிமக்கள்; கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்-14567 மூலம்; மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், தூத்துக்குடி, அவர்களை தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.  .

ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சி : மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மேலஆத்தூரில் ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  அவர்கள் துவக்கி வைத்தார். --------------------------- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மேலஆத்தூரில் ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சி துவக்க நிகழ்ச்சி இன்று (05.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  அவர்கள் கலந்துகொண்டு, ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  அவர்கள் பேசியதாவது: மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் கூறியதன் அடிப்படையில் ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் பயிற்சியினை தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் பகுதி சுய உதவிக்குழுவில் உள்ள மகளிர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் நாபர்டு வங்கியானது ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சியை நடத்துவதற்கு சிப்போ ...