" கோவிட் 19 " நடைமுறைகளை பின்பற்றி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா கொண்டாடுதல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்
" தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கோவிட் 19 நடைமுறைகளை பின்பற்றி திருவிழா கொண்டாடுதல் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் - மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி. செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா 17.02.2021 முதல் 28.02.2021 வரை கொண்டாடுதல் தொடர்பான முன்னேற்பாடுகள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கோவிட்-19 ஊரடங்கு நடப்பில் உள்ள நிலையில் திருக்கோயில்களில் திருவிழாக்கள் நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால் வழங்கப்பட்டுள்ள நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் நடத்துதல் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள். தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் அருள்மிகு சு...