வாட்ஸ் ஆப் - ல் வந்த பயன்னுள்ள தகவல்

வாட்ஸ் ஆப் - ல் வந்த பயன்னுள்ள தகவல்  01 - அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அவசர கால தொலை பேசி எண்கள்  . ( நன்றி:  புதிய தலைமுறை தொலைகாட்சி )
 .
02 - முக்கியச் செய்தி:
*ஆதார் அடையாள அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமானால்  (பெயர் மாற்றம், பிறந்த நாள்,  போன் நம்பர், முகவரி மாற்றம், எழுத்துப் பிழை ஆகியவை) தற்போது அனைத்து தபால் நிலையங்களிலும் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கும் தெரிவிக்கவும்.*


    03 தேசிய நெடுஞ் சாலை பயணத்தின் போது        காரில் பயணம் மேற்கொள்ளும் நண்பர்கள் கவனத்திற்கு ....

 04 - நீங்கள் வெளியூர் செல்லும் பொழுது தேசிய நெடுஞ்சாலையில் அதாவது நேஷனல் ஹைவேஸ் ரோட்டில் செல்கையில் கொடுக்கும் பணம். டோல்கேட்  கிராஸ் செய்வதற்கு மட்டும் அல்ல.  பணத்தைக் கட்டி ரசீது  கொடுப்பார்கள்.அதை பத்ரமா வைத்து கொள்ளவும்.

  உங்க பயணம்
 எந்த சிரமும் இல்லாமல் இருக்கவும் அப்படி இடர் நேர்ந்தால் சரி செய்யவும் சேர்த்து தான் அந்த பணம் செலுத்துகிறோம்..
காரில் செல்பவர்கள் யாருக்காவது  1 .மருத்துவ உதவி தேவைப்பட்டால்  ரசீதின் பின்புறம்   நம்பர் போட்டுருப்பாங்க அதற்கு போன் செய்யவும். உடனடியாக ஆம்புலன்ஸ்  பத்து நிமிஷத்துல வரும்.

 2. வண்டி  பழுதாகி நின்றாலோ அல்லது பஞ்சர் ஆகி விட்டாலும் அதுக்கு இன்னொரு நம்பர் இருக்கும் அதற்கு போன் செய்தால்  பத்து நிமிஷத்துல உங்களுக்காக வந்துருவாங்க வந்து  பஞ்சர் போட்டு கொடுத்துடுவாங்க ரிப்பேர் எனில் அதையும் சரி செய்து கொடுத்து வாங்க இது அவங்க கடமையாகும்.

3.பெட்ரோல் ,டீசல் இல்லாமல் வண்டி நின்று விட்டால். தகவல் சொன்னா உங்களுக்கு  அஞ்சு லிட்டர் அல்லது 10 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை கொண்டு வந்துவிடுவார்கள். அதுக்குண்டான பணத்தை கொடுக்க வேண்டும்.

 இதற்கெல்லாம் சேர்த்துத் தான் நம்ம கிட்ட  வசூல் பண்றாங்க  இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரியாமல் ஏதாவது பிரச்சினை ஆச்சுன்னா தவிச்சு போறாங்க,அலையுராங்க இதை தவிர்க்க இந்த செய்தியை அனைவரிடமும் கொண்டு செல்லவும்வும்.இத்
தகவல் எனக்கு வந்தது அதை வரைமுறை செய்து பகிர்கிறேன்.                                             

*அரவக்குறிச்சி பெரியாஸ்பத்திரி வார்டில் ஓர் கிழிந்த துணிபோல படுத்திருந்தார்  தாத்தா...*

*உழைத்து மெலிந்த தேகம். 84 வது வயதில் கல்லீரல் சுத்தமாய் பழுதாகி போய் மரணத்தின் நாட்களை மருத்துவமனையில் எண்ணி கொண்டிருந்தார்...!...*

*ரவுண்ட்ஸ் வந்த சீஃப் டாக்டர் வீரமணி தாத்தாவின் கைநாடியை பிடித்து பார்த்துவிட்டு மேவாயை தடவியபடியே.... இன்னும் இரண்டு நாள்தான் தாங்குவார் சொந்த காரங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிடுங்க....*

*வீட்டுக்கு எடுத்துட்டு போய்டுங்க என்று கூறியபடியே அவர் பிள்ளைகளின் பெருங்குரலெடுத்த அழுகையை காதில் வாங்கிக்கொள்ளாமல் அடுத்த நோயாளியை பார்க்க நகர்ந்தார்...!...*

*ஆம்புலன்ஸில் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார் வீரமணி தாத்தா. அவர் மூச்சு எப்போது வேண்டுமானாலும் நின்று விடுவேன் என்று போக்கு காட்டியது...*

*கட்டிலில் மூச்சுவிட சிரமப்பட்டபடி கண்மூடி படுத்திருந்தார் தாத்தா. தம் தங்கை முறையான தாத்தாவின் மகளிடம் விசாரித்தார் அக்கா....*

*"சாப்பாடு இறங்குதா..?"...*

*"அப்பப்போ கூழாக ஏதாவது கொடுக்கிறோம். கொஞ்சமா உள்ளே போகுது"....*

*"நான் ஒன்னு சொன்னா கேட்பியா தங்கச்சி"...*

*"சொல்லுக்கா... நான் என்ன செய்யனும்...?"...*

*"எப்படியும் இரண்டு நாளில் இறந்திடுவார்னு டாக்கடர் சொல்லிட்டாரு இல்ல. கடைசியா ஒரு முயற்சி செய்து பார்ப்போம்.....*

*இன்னில இருந்து இந்த இரண்டு நாளும் வெறும் மல்லிச்சாறு மட்டுமே கொடுப்போம். அது கழிவுகளை வெளியேத்தி புது ரத்தத்தை ஊற வைக்கும். சித்தப்பா எழுந்து உட்காருவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!" சரோஜா அக்காவின் கண்களில் அத்தனை உறுதி....*

*அவர்கள் குடும்பத்தில் சரோஜா அக்கா மீது மிகுந்த மரியாதை உண்டு. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஆலோசித்தனர். அந்த குடும்பத்தின் ஆணிவேர் வீரமணி தாத்தா. அவர் 
இன்னும் சிலகாலம் உயிரோடு
 இருந்தால் அதுபோல வேறு சந்தோசம் உண்டா..?..*
👇🏿
*அக்காவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டனர். வீட்டில் மல்லிச்சாறு தயாரானது. ஓர் எதிர்பார்ப்போடும், பரபரப்போடும் அங்கும் இங்கும் ஓடினர். தாத்தாவை மடியில் கிடத்தி மல்லிச்சாறை அவர் வாயில் சிறிது சிறிதாக புகட்டினர்....*
👆🏿
*இரண்டுநாள் முழுக்க மல்லிச்சாறு மட்டுமே..!.. இடையிடையே கொஞ்சமாய் பழச்சாறும்....*

*டாக்டர் விதித்த கெடு இன்றோடு முடிகிறது. நாளை விடியலில் தாத்தா உயிரோடு இருப்பாரா என்கிற பதைபதைப்பில் உறவினர்கள் எல்லாம் தாத்தாவையே சுற்றி வந்தனர்...*

*இரவு உறங்கி போனது...!...*

*மூன்றாம் நாள் விடியலில் நெஞ்சு திக்... திக்..... என அடித்து கொள்ள சொந்தங்கள் தாத்தாவை நெருங்கி சென்றனர்....*

*கண்மூடி படுத்திருந்தவர்.....  ஓர் இருமலோடு விழித்து கொண்டார்....*

*ஓடு... மல்லிஜுஸ் எடுத்துட்டு வாங்க.. ஐயாவுக்கு கொடுப்போம். எங்கிருந்தோ குரல் ஒலித்தது....,*

*மீண்டும் ஓர் இருமல் இருமியபடி தாத்தா எழுந்து உட்கார்ந்தார்....*

*"ஏன் புள்ள என்ன பார்த்து அழுதுகிட்டு நிக்கித.... எதுக்கு இம்புட்டுபேரு வந்திருக்காங்க" தன் மனைவியை கேள்வியோடு பார்த்தார் வீரமணி தாத்தா.....*

*இந்த எண்பத்தாறு வயதிலும் ஆரோக்கியமாய் இருக்கிறார். நாம் பார்க்கசென்ற நேரம் மனிதர் கட்டிலில் ஒய்யாரமாய் படுத்திருந்தார். எவர் துணையுமின்றி எழுந்து நடமாடுகிறார்.....*

*தொடர்ந்து..." இந்த மல்லிசாறை எல்லா ஏழை,பாளைகளும் குடிக்கோணும். டாக்டர் கிட்டபோயி ஆயிரகணக்குல செலவு பண்ணியும் குணமாகத என் நோய் இந்தமல்லிசாறால குணமாயிட்டுதே. எனக்கு இருந்த சுகர்நோயும் இப்ப இல்ல. மல்லிச்சாறு பத்தி எல்லா மக்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்....*

*அமிர்த பானம் கொத்தமல்லி இலைச்சாறு தயாரிப்பது எப்படி?:-....*

*நாட்டு கொத்துமல்லி இலை - கால் கட்டு,...*

*தேங்காய் - 1 ,...*

*நாட்டு சர்க்கரை - தேவையான அளவு ...*

*சுத்தம் செய்த கொத்துமல்லி இலையுடன் தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டவும்....*

*இதன் கூட தேவையான அளவு தண்ணீர்,நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம்....*

*இந்த சாற்றினை கண்டிப்பாக அடுப்பில் வைக்க கூடாது....*

*(1). வெறும் கொத்துமல்லி இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு, உப்பும், மிளகு தூளும் சேர்த்து அருந்தலாம்....*

*(2). கொத்துமல்லி இலைச்சாறுடன், பசும்மோர், உப்பும் கலந்தும் அருந்தலாம்....*

*(3). கொத்துமல்லி இலைச்சாறு அருந்தும் நாள் அன்று பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்....*

*இதை தொடர்ந்து பருகுவதால் காமாலை, கேன்சர் போன்ற மிகக் கொடிய நோய்கள் அனைத்தும் குணமாகும்....*

*உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும்....*

*வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சினைகளையும் குணமாக்கும்....*

*கல்லீரலை பலப்படுத்தும். பித்தம் கட்டுக்குள் இருக்கும்....*

*இதை தயார் செய்வது மிகவும் எளிதானது.....*

*இதை அனைவரும் பருகலாம்,....*

*தினமும் தண்ணீர்க்கு, டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்.....*
                                                                                                 எரிவாயு சிலிண்டர் குறித்து
*1906-என்கிற எண்ணின் அத்தியாவசியம் பற்றி நம்மில் எத்தனை நபர்களுக்குத் தெரியும்*

 ஞாயிற்றுக்கிழமை எனக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவம் ஏற்பட்டது.  நான் எரிவாயு சிலிண்டரை மாற்ற வேண்டியிருந்தது. 

 *புதிய சிலிண்டரை இணைத்து இயக்கிய போது, ​​நான் வாயு கசிவதை உணர்ந்தேன்.*

  நான் புதியதாக மாற்றிய எரிவாயு சிலிண்டரின் திறப்பானை Lock செய்து மூடிவிட்டேன்.

*உடனடியாக  நான் ஒன்று அல்லது இரண்டு ஏரியா ஏஜென்சிகளை அழைத்தேன், ஆனால் அது ஒரு ஞாயிற்றுக்கிழமை என்பதால், அவர்கள்  திங்களன்று ரிப்பேர் செய்ய ஆட்கள் வருவார்கள் என்று சொன்னார்கள்.*

 ஏதேனும் அவசர எண் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள விரும்பினேன், எனவே Google ஐ முயற்சித்தேன்.  கூகிள் *1906* என்ற என்னை அழைக்கச் சொல்லி காண்பித்தது.  நான் *1906* என்ற எண்ணிற்கு முயற்சித்தேன்.  ஒரு பெண்மணி தொலைபேசியை எடுத்து  பேசினார்.  என் பிரச்சினையை அவரிடம் விளக்கினேன்.  ஒரு மணி நேரத்திற்குள் ஒரு நபர் பணிக்கு வருவார் என்று அவர் கூறினார்.  வருகைக்கு கட்டணம் ஏதும் இல்லை என்றும், ஒரு வேளை *குழாய் (Tube) மோசமாகிவிட்டால் ஒழிய நான் அவருக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.*

*ஒரு இளம் வயது நபர் அரை மணி நேரத்திற்குள் வந்து, எரிவாயு சிலிண்டரை சரிபார்த்து சிலிண்டருக்கு ஒரு புதிய வாஷரை மாற்றினார்.* 

*இது ஒரு சிறிய வேலை என்றார்.  அவர் எந்த ஊதியத்தையும் ஏற்கவில்லை.*

 *இந்த சேவை மத்திய அரசிடமிருந்து எந்த நேரத்திலும் வழங்கப்படுகிறது.* 

 *அதே பெண்மணி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் போன் செய்து, வேலைக்கு வந்தாரா, தங்களுடைய பிரச்சினையை சரி செய்து தந்தாரா என்று சோதித்தார்*.

 *1906* என்கிற இந்த தொலைபேசி எண்ணை உங்களுக்கு தெரிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 *இது 24x7 சேவையாகும்*


                                                                                            எழுத்தாளர்கள் மாநாட்டில் N.S.கிருஷ்ணன்* அவர்களின் பேச்சு
ஒரு சமயம் கலைவாணர்  *N.S.கிருஷ்ணன்* எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார்.

“தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட
*மையை* 
தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?

சிலர்
*தற்பெரு“மை“* யில்
தொட்டு எழுதுகிறார்கள்.

சிலரோ   *பொறா“மை"*  யில்
தொட்டு எழுதுகிறார்கள்.

வேறு சிலரோ
*பழ“மை“*   யில்
தொட்டு எழுதுகிறார்கள்.

பரவாயில்லை.
இவற்றையெல்லாம்
*அரு“மை“* யான
எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.

“ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில
*“மை“கள்*
உள்ளன.
இவை என்ன தெரியுமா?

*கய“மை“*,
*பொய்“மை“*,
*மட“மை“*,
*வேற்று“மை“* 
ஆகியவைதாம்.

கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது.
“எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய
*“மைகள்“*
என்னென்ன தெரியுமா?

*நன்“மை“* 
தரக்கூடிய
*நேர்“மை“*,
*புது“மை“*,
*செம்“மை“*,
*உண்“மை“*.
இவற்றின் மூலம் இவர்கள்
நீக்க வேண்டியது
எவைத் தெரியுமா?

*வறு“மை“*,
*ஏழ்“மை“*,
*கல்லா“மை“*,
*அறியா“மை“*
ஆகியவையே.

இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள்
*கட“மை“* யாகவும்,
*உரி“மை“ யாகவும்*
கொண்டு சமூகத்திற்குப்
*பெரு“மை“*
சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார்.

கூட்டத்தில் உற்சாக ஒலி 
விண்ணைப் பிளந்தன.