முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 27, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காவல்துறையின் புதிய சேவை மையத்தை நாடிய 50 பேருக்கு நிவாரண தொகுப்புகள்

  ஏழை, எளிய மக்களின் பசியை போக்குவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று ஆரம்பித்த காவல்துறையின் புதிய சேவை மையத்தை நாடிய  50 பேருக்கு அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.            கொரோனா கால ஊரடங்கின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்,  மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள்;, ஏழை எளிய மக்கள்,  உணவின்றி தவிப்பவர்கள் மற்றும் அத்தியாவசியத்தேவை வேண்டுபவர்களுக்கு வீடு தேடி வந்து உதவுவதற்கு 24 மணி நேரமும்; இயங்கும் காவல்துறையின் புதிய சேவைக்கான தனிப்பிரிவு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேற்று (26.05.2021) துவக்கி வைத்து, பொதுமக்கள், தங்கள் உதவிக்கு தொடர்பு கொள்வதற்கான செல்போன் எண். 95141 44100 எண்ணையும் அறிவித்திருந்தார்.   நேற்று அறிவித்தது முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பல ...

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தவர் கைது

 . தூத்துக்குடி மாவட்டம்   எப்போதும் வென்றான்   காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவஞானபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.  ஜெயக்குமார் அவர்கள் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்களுக்கு சோதனையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்துமாலை, ஆய்வாளர் ரமேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சுப்பையா, தலைமை காவலர் திரு. கோபால் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவஞானபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த சர்க்கரை மகன் அறிவழகன் (42) என்பவரது வீட்டருகில் உள்ள ஒரு ஓட்டு சாய்ப்பில் சோதனை செய்தனர். அங்கு 15 சாக்கு மூட்டைகளில் சட்டவிரோத விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை; அறிவழகன் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  மேற்படி போலீசார் அறிவழகனை கைது செய்து,...