முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 10, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்ரோ நில எடுப்பு கையகப்படுத்தப்படும் பகுதி சேர்ந்தவர்களுக்கு வசதியுடன் கூடிய குடியிருப்பு அமைக்க நில தேர்வுக்கான கள ஆய்வு

  தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் செட்டியாபத்து ஊராட்சி தாங்கையூர் பகுதியில்  இஸ்ரோ நில எடுப்பில்  கையகப்படுத்தப்படும் கூடல்நகர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு வீடுகள், சமுதாய கூடம் மற்றும் பல்வேறு வசதியுடன் கூடிய குடியிருப்புகளை அமைப்பதற்கு நிலம் தேர்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார். ---------------- தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் செட்டியாபத்து ஊராட்சி தாங்கையூர் பகுதியில்  இஸ்ரோ நில எடுப்பில் கையகப்படுத்தப்படும் கூடல்நகர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு வீடுகள், சமுதாய கூடம் மற்றும் பல்வேறு வசதியுடன் கூடிய குடியிருப்புகளை அமைப்பதற்காக நிலம் தேர்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.06.2021) கள ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளுக்கு நிலஎடுப்பு பணிகள் நடைபெற்ற...

கோவில்பட்டியில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு. . நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கோவில்பட்டி சிதம்பரநாடார் காமாட்சியம்மாள்திருமண மஹாலில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் போன்ற நிவாரண பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு இன்று (10.06.2021) கோவில்பட்டி சிதம்பரநாடார் காமாட்சியம்மாள் திருமண மஹாலில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் 125 பேருக்கு அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற நிவாரண பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் பேசுகையில், அரசு அறிவித்துள்ளவாறு 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முக...

ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக வளர்க்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் : மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வை

  தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக வளர்க்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் அடர்காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மியாவாக்கி முறையில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். ------------------------------ தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் வளர்க்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் அடர்காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மியாவாக்கி முறையில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.06.2021) நேரில் சென்று பார்வையிட்டார்.   பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் அடர்காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மியாவாக்கி முறை...

ஏ. வி .எம். குரூப் ஆப் கம்பெனி ., மாரிஸ் அசோசியேசன் பிரைவேட் லிமிடெட் சார்பில் ரூ 20 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறியூட்டிகள்

  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏ வி எம் குரூப் ஆப் கம்பெனி மாரிஸ் அசோசியேசன் பிரைவேட் லிமிடெட் சார்பில்     கம்பெனி மேலாண்மை இயக்குனர் திரு ஏ வி எம் மணி அவர்கள் ரூ 20 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறியூட்டிகளை  மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர்  பெ. .கீதாஜீவன் அவர்களிடம் வழங்கினர்.    அருகில்  மாவட்ட ஆட்சித் தலைவர் திரு மரு. கி. செந்தில்ராஜ் இ.ஆ.ப. மற்றும் உதவி ஆட்சியர் ( பயிற்சி)   ஸ்ருதயஞ்ஜெய் நாராயணன் மற்றும் திரு ஏ.வி.எம் .குரூப் ஆப் கம்பெனி இயக்குனர்கள் திரு ஏ.வி.எம் சங்கர்   திரு சீனிவாஸ் மாரிமுத்து ; திரு ஹரிஹரன் மாரிமுத்து  ஆகியோர் உள்ளனர்