தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் 11-ஆவது நிகழ்வு கடந்த ஞாயிறு(21.01.24) அன்று தூத்துக்குடி அழகப்பா கல்வி மையத்தில் உள்ள சித்திரக்கூடம் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்- நாசரேத்தைச் சார்ந்த தேரி எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் அவர்கள் எழுதிய "அப்பாவின் இரண்டாவது மரணம்" சிறுகதை நூல் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் கவிஞர் சைமன் அவர்கள் வரவேற்றுப் பேசினார். தூத்துக்குடியைச் சார்ந்த தமிழாசிரியர் முனைவர் சு.முருகன் மற்றும் நாசரேத்தைச் சார்ந்த இலக்கிய ஆர்வலர் ம.கண்ணன் இருவரும் நூலைக்குறித்து சிறப்பாக ஆய்வு செய்து பேசினர். மூக்குப்பேரி கவிஞர் தேவதாசன்,நாசரேத்தைச் சார்ந்த மேனாள் பேராசிரியர் காசிராசன் மற்றும் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் அய்யாக்குட்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் கண்ணகுமார விஸ்வரூபன் அவர்கள் ஏற்புரை வழங்கினார். புலைவர் சு.முத்துசாமி அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்வு இனிது நிறைவுற்றது. பேரவையின் சார்பில் நூலாசிரியருக்கு சான்றிதழுடன் நூலாடையும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. தோழமையுடன்- நெல்லை தேவன்.
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !