முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 23, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமூக வலை தளங்களில் அமைதிக்கு பங்கம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

     இன்று முழு ஊரடங்கை அமல்படுத்தும் காவல்துறையினரின் பணியை தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு - சமூக வலைதளங்களில் ஜாதி, மதக் கலவரத்தையோ, பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்தியையோ பரப்புவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என மாவட்ட எஸ்.பி  எச்சரிக்கை.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (23.08.2020) ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையின் முழு ஊரடங்கு பணியினை தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று ஆய்வு செய்தார்.  ...

புதுப்பிக்கப்பட்ட மகாகவி பாரதியார் இல்லம் : அமைச்சர் கடம்பூர் ராஜீ திறந்து வைப்பு

தூத்துக்குடி எட்டயபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் பழமை மாறமல் புதுப்பிக்கப்பட்ட  மகாகவி பாரதியார் இல்லத்தை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி எட்டயபுரத்தில் பழமை மாறமல் புதுப்பிக்கப்பட்ட  மகாகவி பாரதியார் இல்ல திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.08.2020) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட இல்லத்தில் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.போ.சின்னப்பன் அவர்கள்  முன்னிலை வகித்தார்கள். பின்னர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:- இந்திய திருநாட்டிலேயே நாட்டின் விடுதலைக்கு வி...