கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் 21.05.2021 அன்று சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சியில் 21.05.2021 அன்று சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலையில் வார்டு 5, எட்டையாபுரம் ஹவுசிங் போர்டு வார்டு 6, சக்திவிநாயகபுரம், வார்டு 23, பிரமுத்து விளை வார்டு 19, எஸ்.எஸ்.மாணிக்கபுரம், வார்டு ...