முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 19, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டர்னிங்பாயின்ட் அறக்கட்டளை சார்பாக. கொரோனா கால. நிவாரண தொகுப்பு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். -

19.07.2021 தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியில் டர்னிங்பாயின்ட் அறக்கட்டளை சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு 70 ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.   தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி நாராயணசுவாமி கோவிலில் கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு 70 ஏழை, எளிய மக்களுக்கு டர்னிங்பாயின்ட் அறக்கட்டளை சார்பாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகள் வழங்க இன்று (19.07.2021) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை வழங்கினார்.  அப்போது அவர்கள் பேசுகையில், கொரோனா பெருந்தொற்று 3ம் கட்ட பரவல் காரணமாக 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. அடிக்கடி கை...

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பயனடைந்த பொதுமக்கள் நன்றி பாராட்டு

 தூத்துக்குடி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் முதண்மை திட்டமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பயனடைந்த பொதுமக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி ------------------------ மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழக மக்களின் நலனை காக்கும் வகையில் பல எண்ணற்ற திட்டங்களை வழங்கி உள்ளார்கள். கடந்த காலத்தில் மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது ஏழை, எளிய மக்கள் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளும் வகையில் வண்ண தொலைக்காட்சி பெட்டியை வழங்கினார்கள். மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். மேலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். தமிழகம் முழுவதும் போக்குவரத்தினை எளிமையாக்கும் வகையில் பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட்டது. அதன் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியின்படி தேர்தலுக்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியின் மூலம் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்க...

தூத்துக்குடி மாவட்டத்தில் 20.07.2021 அன்று காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள்; நடைபெறும் இடங்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

------------------------------------- தூத்துக்குடி மாவட்டத்தில் 20.07.2021 அன்று காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள்; நடைபெறும் இடங்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்  தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு 01.04.2021 முதல் 19.07.2021 முடிய மொத்தம் 6,810 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.  இதன் தொடர்ச்சியாக 20.07.2021 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கீழ்க்;கண்ட இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி - தூத்துக்குடி, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - பாத்திமா நகர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - கணேஷ் நகர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - திரேஸ்புரம், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - தருவை ரோடு, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் -  மடத்தூர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - முள்ளக்காடு, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மில்லர்புரம், தூத்துக்குடி...

வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் வந்த பணத்தை எடுக்காமல் விட்ட ரூபாய் : . காவல்துறையில் புகார்: அடுத்து வந்தவர் எடுத்தது கண்டுபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் வந்த பணத்தை எடுக்காமல் விட்ட ரூபாய் 10,000/=-த்தை, அங்கு அடுத்து வந்த மற்றொரு நபர் எடுத்துச்சென்றதை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்து மீட்ட பணத்தை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.  தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த சம்சுமரைக்காயர் மகன் சம்சுகனி (65) என்பவர் கடந்த 07.05.2021 அன்று ஸ்பிக் நகரில் உள்ள வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூபாய் 10,000ஃ-தை எடுத்துள்ளார். ஆனால் அந்த பணப் பரிவர்த்தனை முடிவடைவதற்குள் சம்சுக்கனி பணம் வரவில்லை என்று அதே அறையிலிருந்த மற்றொரு இயந்திரத்தில் ரூபாய் 10,000 /= -ம் எடுத்துச் சென்று விட்டார்.  அவர் வீட்டிற்குச் சென்ற பிறகு செல்போனிற்கு இரு முறை பணம் 10,000/=- எடுத்ததாக குறுஞ்செய்தி வந்திருக்கிறது, இது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட வங்கியில் புகார் அளித்து பலனில்லாததால் கடந்த 10.06.2021 அன்று தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குற...