முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 25, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒத்துழைப்பு வழஙக வேண்டுகோள்

------------------------------------------------------------------------------------------------------------ கொரோனா வைரஸ் நோயை முற்றிலும் தடுத்திடும் விதமாக சமூக தனிமைப்படுத்துதலை தீவிரப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில், குற்றவியல் விசாரணை நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் கடந்த 24.03.2020 முதல்30.06.2020 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும் போதும்,பொது இடத்தில் நடமாடும் போதும் உரிய முறையில் முககவசம் அணிவது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது  இதற்கு மாறாக வீட்டை விட்டு வெளியில் வரும் போதும், பொது இடங்களில் நடமாடும் போதும் உரிய முறையில் முககவசம் அணியாமல் பொது  இடங்களில் நடமாடுபவர்களுக்கு முதன்முறையாக இருப்பின் காவல் துறையினர், மற்றும் உள்ளாட்சித்துறையினர் மூலம் ரூ.50ஃ-ம் உடனடி அபராதம் விதிக்கப்படும் என்றும் மீண்டும் ...

கொரனோ தொற்று விதிமுறைகளை மீறியதாக தூத்துக்குடி மாவட்டம் குமாரகிரி கிராமத்தில் உளள திருமணம் மண்டபத்திற்கு சீல்

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் சமூக பரவலாக மாறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது மேலும் தமிழக அரசு சுய ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்கள் அவசிய பணிகளுக்கு மட்டும் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். வீட்டில் இருந்து வெளியே வரும்போதுமுககவசங்களை அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், அடிக்கடி சோப்பு மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.                                                                           . தூத்துக்குடி மாவட்டம் குமாரகிரி கிராமத்தில்  லெட்சுமி மஹால் திருமணம் மண்டபத்தில்  (24.06.2020)அன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சுமார் 300 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமலும், திருமண மண்டப வாசலில் சேனிடைசர், கிருமிநாசினி எதுவும் பயன்படுத்தபடாமலும் இருந்துள்ளனர். ...

தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த சாதனையாளர்களிடம் இருந்து டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் நாட்டிற்கு பெருமை தேடித்தரும் சிறந்த சாகச வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.                                                                                                                                                                                     அதன்படி, இந்திய அரசின் 2019ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த சாதனையாளர்கள் நிலம், நீர் மற்றும் காற்று தவிரஇவ...