முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 3, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம்

  சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம். சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப்  பொறியியல்   கல்லூரியில்  தூத்துக்குடி நேரு யுவகேந்திராவும் தேசிய நாட்டு நல பணி திட்டம் சார்பாக  வாக்காளர்  விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடைபெற்றது  . இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார்.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இசக்கி விழிப்புணர்வு எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு வாக்களிப்பது அவசியத்தை பற்றி உறுதிமொழி எடுக்கப்பட்டது.   மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லூரி நாட்டு நல பணி அலுவலர் டென்னிசன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். உடற்கல்வி இயக்குனர் மாதவன் மற்றும் ஜாஸ்பர் விளையாட்டுப் போட்டிகளை  நடத்தினார்கள்.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி  துறை தலைவர்கள் டாக்டர். விஜயலட்சுமி டாக்டர். ஜேஸ்பர்லின், செல்வ...

நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் தென் மண்ட அளவிலான போட்டியில் வெற்றி

  நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் தென் மண்ட அளவிலான போட்டியில் வெற்றி .  தென் மண்ட அளவிலான கராத்தே போட்டி.  தூத்துக்குடி  மாவட்டம் முத்தையாபுரத்தில் வைத்து      நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட. இப்போட்டியில்  ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் கட்டா மற்றும் சண்டை பிரிவில்  வெற்றி பெற்று பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பெற்றனர்.  பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் கராத்தே டென்னிசனை சவுத் இந்தியன் டிரஸ்ட் நிறுவனர் சுரேஷ் மற்றும் சாண்டி மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் பாராட்டினார். இதில்  மாஸ்டர் காளிராஜ் மாஸ்டர் சபரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்