தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம்; சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 31 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். கடந்த 17.05.2021 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பண மோசடி செய்து நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த நபரை தேடி கண்டுபிடித்து கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 5 லட்சத்தை கைப்பற்றிய கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிவண்ணன், உதவி ஆய்வாளர் திரு. அரிகண்ணன், முதல் நிலை காவலர் திரு. நாகராஜ், காவலர் திரு. பாலமுருகன், ஊர்காவல் படை காவலர் திரு. ஆறுமுக சங்கர் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும், கடந்த 19.05.2021 அன்று எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த மினி லாரியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை இருப்பதை கண்டறிந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான அவற்றை பறிமுதல் செய்து, 2 எதிரிகளை கைது செய்த எட்டையாபுரம் காவல்நிலைய ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !