தூத்துக்குடியில் மேம்பாலம் பணிகளில் 32 ராட்சஷ காண்கிரிட் தூண்கள் பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (நவ.2) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், திருச்செந்தூர் வஉசி துறைமுகம்,ஸ்பிக் செல்லும் ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேற்படி பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சாலைபணிகள் முடிக்கப்பட்டு மத்தியில் ராட்சஷ காண்கிரிட் தூண்கள் 32 எண்ணம் அதற்கான இடத்தில் பொறுத்தும் பணி மிகவும் முக்கியமானது ஆகும். மிகுந்த கவனத்துடன் இப்பணிகளை செய்வதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர், தூத்துக்குடி திட்ட செயலாக்க பிரிவு முனைப்புடன் அதற்கான ஆயத்த பணிகளை செய்து மேற்படி பாலம் 2023 பெப்ரவரி மாத்த்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்நேர்வில் இப்பாலம் அமைப்பதில் முக்கிய பணியான 32 தூண்களை பொறுத்தும் பணி 2.11.2022 முதல் 11.11.2022 வரை நடைபெறவுள்ளது. •...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !