இடுகைகள்

பிப்ரவரி 9, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் - காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட - எஸ்.பி பாராட்டு

படம்
  தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 20 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.   கடந்த 30.01.2020 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செயின் பறிப்பில் வழக்கின் எதிரியை கைது செய்து அவரிடம் இருந்து ரூபாய் 1,00,000ஃ- மதிப்புள்ள 5 சவரன் நகையை பறிமுதல் செய்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஐயப்பன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்ற பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் திரு. முருகன் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர் திரு. ஸ்ரீராம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், கடந்த 03.02.2021 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் நடந்த செயின் பறிப்பு வழக்கின் எதிரிகள் 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 2,28,000ஃ- மதிப்புள்ள 7 சவரன் நகையை பறிமுதல் செய்த கயத்தாறு காவல் நிலையம் ஆய்வாளர் திரு. முத்து...