கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 5-வது கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படவில்லை. பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும், தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தினமும் பள்ளிகளின் நிர்வாக வேலை தரப்படுகிறது. தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தவாறு ஆன்லைனில் பாடம் நடத்துகின்றனர். இதனிடையே தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களை நிர்பந்திக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில்வழக்குதொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையில்கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் ஆன்லைன் மூலம...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !