முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வாசகர்கள் கவனத்திற்கு

தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல்

தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.  அதன் போது தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் “உதயநிதி ஃப்ரெஷ் ஜூஸ் கார்னர்” கடைக்கு வருகை புரிந்தார். இந்த கடையின் உரிமையாளர் ஜே.கே. ஜஸ்டின், தனது உழைப்பில் இருந்து சேமித்து வைத்த பணத்தை பயன்படுத்தி, ஏழை எளிய மக்களின் வேண்டுகோளை ஏற்று 7 தையல் மிஷின்களை வாங்கி வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். அந்த தையல் இயந்திரங்களை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கையால் இன்று ஏழை மற்றும் எளிய மக்களுக்கு வழங்கினார். ஒரு காலத்தில் வறுமையிலும் தன்னம்பிக்கை இழந்த நிலையிலும் இருந்த ஜஸ்டினுக்கு, உதயநிதி ஸ்டாலின், உதவி செய்து வாழ்வாதாரமாக இந்த கடையை அமைக்க உதவினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், முயற்சியும் ஏற்பாட்டிலும் இந்த கடை உருவாக்கப்பட்டு ஜஸ்டினுக்கு வழங்கப்பட்டது. அந்த கடையின் வருமானத்திலிருந்து இன்று ஜஸ்டின் அவர்கள் சமூகப் பொறுப்புடன் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்த...
சமீபத்திய இடுகைகள்

எதிர்காலத்தில் இவர்கள் ம

 மகளிர் தின  நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட கைம்பெண் நல்வாழ்வு சங்கம் சார்பாக "தமிழக முதல்வர் அவர்களுக்கு மனு"

தூத்துக்குடி மாவட்ட கைம்பெண் நல வாழ்வு சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனு ஒன்று அனுப்பப்பட்டது. அதில் "தமிழ்நாடு அரசு மகளிர்க்காக பல புதிய சிறப்பான திட்டங்களை அறிவித்து செயலாற்றி வருகிறீர்கள். குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விடியல் பயணத்திட்டம், காலை உணவுத்திட்டம் மகளிர் மாணவிகளுக்கான கல்லூரிகளைத் திட்டங்கள் இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத திட்டங்களை தாங்கள் செயலாற்றி வருகிறீர்கள்.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏழை விதவைப் பெண்கள் குடியிருக்க வீடு இல்லாமல் மிகவும்கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.   ஏழை விதவைகளுக்கு, இலவச பட்டா அல்லது குடிசை மாற்று வாரியம் -  தமிழ்நாடு வீட்டு வாரியத்தால் கட்டப்பட்டு வரும் வீடுகளில்.... இலவசமாக அல்லது குறைந்த வாடகையில் வீடுகள்  ஒதுக்கி தர  உத்திரவிடுமாறு. தூத்துக்குடி மாவட்ட  கைம்பெண் நல வாழ்வு  சங்கத்தின் சார்பாக அதன் மாவட்ட தலைவி R.சங்கீதா ரமேஷ் அந்த மனுவில்  கேட்டுக் கொண்டுள்ளார்

இரட்டை மாட்டு வண்டி போட்டி: பாய்ந்து சென்ற காளைகள்

 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம்  புதூர்பாண்டியபுரம் செல்வ முத்து விநாயகர் கோவில் 37-ம் ஆண்டு வருஷோபிஷேகம் நடைபெற்றது  இந்த விழாவை யொட்டி மாட்டுவண்டி பந்தயம் இரண்டு பிரிவுகளாக . தூத்துக்குடி புதியம்புத்தூர் சாலையில் நடந்தது.  இதில் தூத்துக்குடி, நெல்லை, மதுரை, தேனி, இராமநாதபுரம் உட்பட பல மாவட்டங் களில் இருந்து பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 12 மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 24 மாட்டு வண்டிகளும் கலந்து கொண் டன.   பந்தயத்தை அயிரவன்பட்டிதொழிலதிபர் முருகேச பாண்டியன், புதூர்பாண்டி யாபுரம் தொழிலதிபர்பொன் முருகன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். 15 கி.மீ.தூரம் இலக்கு நிர்ண யிக்கப்பட்ட பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசாக ரூ.2 லட்சத்தை சலப்பேரி துக்காம்பிகை மாட்டு வண்டியும், 2-வது பரிசாக ரூ.1.50 லட்சத்தை சிவ கங்கை மாவட்டம் முத்தையாதிருப்பதிமாட்டு வண் டியும், 3-வது பரிசாக ரூ.1 லட்சத்தை நெல்லை மாவட் டம் வேலங்குளம் கண்ணன் மாட்டு வண்டியும், 4-வது பரிசாக ரூ.50 ஆயிரத்தை மதுரை அவனியாபுரம் மோகன் மாட்...

இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

  தூத்துக்குடி S.A.V.மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி : தூத்துக்குடி, S.A.V.மேல்நிலைப்பள்ளியில், திருச்சிராப்பள்ளி இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில் மேல்நிலை மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் மாரியப்பன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக Army Recruitment Office யை சார்ந்த சுபேதார் திரிபாதி (Army Recruitment Office, ARO -Tiruchi.), கார்த்திகேயன் (Civil Defence Staff) கொண்டு இராணுவத்தில் சேர்வதற்கான கல்வி மற்றும் உடல் தகுதி விதிமுறைகள், பல்வேறு வாய்ப்புகள் குறித்து விரிவாக மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். இந்நிகழ்ச்சி மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை உருவாக்கும் விதமாகவும், இந்திய இராணுவத்தில் சேர்வதற்கான விழிப்புணர்வு மற்றும் ஊக்கத்தை மாணவர்களுக்கு வழங்கும் விதமாகவும் இருந்தது. நிகழ்ச்சி நிறைவில் முதுகலை ஆசிரியர் சுப்பிரமணியன் அனைவர்க்கும் நன்றி கூறினார்.

"கலையை அறிவோம்"

கலைகளையும் கலைஞர்களையும் ஆவணப்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வரும்"கலையின் குரல்" அமைப்பின் கலை அறிவோம் நிகழ்வு 06 பாவனை நாடகக் கலையின் அறிமுக பயிற்சி தூத்துக்குடி புரூஸ்லீ தற்காப்பு கலை பயிற்சி பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக வீதி நாடக கலைஞர் கலைச்சுடர்மணி பா.செந்தில்வேல் அவர்கள் அனைவரையும் வரவேற்கும் விதமாக வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பயிற்சியாளரைக் குறித்த அறிமுகத்தை கலையின் குரல் அமைப்பின் நிறுவனர் கலைவளர்மணி ப.சக்திவேல் வழங்கினார்.  தொடர்ந்து பாவனை நாடகத்தைப் பற்றிய அறிமுகத்தையும் உடல்மொழி, முகபாவனைகள், நகர்வுகள் மற்றும் கோமாளித்திறன் நடிப்பு போன்ற பயிற்சிகளை மதுரை நடன மற்றும் நாடகப்பள்ளி நிறுவனர் தோழர். மைம் உமேஷ் அவர்கள் வழங்க பங்கேற்பாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர்.  கலையின் குரல் அமைப்பின் செயல்பாடுகளையும் பயிற்சிகளையும் குறித்து தமிழ்நாடு கலை இலக்கிய  பெருமன்றத்தின் தாளமுத்து நகர் கிளைச் செயலாளர் தோழர் செ.அந்தோணி லாரன்ஸ் வாழ்த்துரை வழங்கினார்.  அடுத்ததாக பயிற்சியாளர் மைம் உமேஷ் அவர்களை வாழ்த்தி நெடுஞ்சாலை கவி...

தேவார பாடல் போட்டி: SMS இசைப்பள்ளி மாணவ - மாணவிகள் வெற்றி

  மகா சிவராத்திரியை முன்னிட்டு திருமந்திரநகர் அருள் மிகு  ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் தேவாரம் பாடல் போட்டி நடைபெற்றது   மகா சிவராத்திரியை முன்னிட்டு     திருமந்திரநகர் (தூத்துக்குடி) அருள் மிகு  ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் தேவாரம் பாடல் போட்டியில் ஏராளமான ஆண்- பெண் குழந்தைகள் வயதுக்கேற்ப பிரிக்கப்பட்ட பிரிவுகளில் போட்டியில் கலந்து கொண்டு பக்திபரவசத்தோடு...தேவரரா பாடல்களை பாடினார்கள் போட்டியின் முடிவில்  SMS இசை மற்றும் நாட்டிய பள்ளி மாணவ, மாணவிகள் இளையோர் பிரிவில் அருள்இனியா முதல் பரிசும்  சரவணபெருமாள் இரண்டாம் பரிசும்  மற்றும் ரோஹித் ராகவேந்திரா மூன்றாம் பரிசும்  சீனியர் பிரிவில் செல்வ ஸ்ரீ ஷன்விகா முதல் பரிசும், மற்றும் சிந்துஜா ஸ்ரீ இரண்டாம் பரிசும் பெற்றனர் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை  அருள் மிகு ஸ்ரீ பாகம்பிரியாள்உடனுறை  சங்கர ராமேஸ்வரர்  திருக்கோவிலில் நிர்வாகத்தின் சார்பாகவும் மற்றும் SMS- இசை மற்றும் நாட்டிய பள்ளி சார்பாக  அதன் நிர்வா...