முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 5, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மகளிர் தினத்தில் மகளிருக்கான சிறப்பு தொழில் ஊக்குவிப்பு முகாம்

மகளிர் தினத்தில் மகளிருக்கான சிறப்பு தொழில் ஊக்குவிப்பு முகாம்     தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாகத் தொழில் தொடங்கி வருவாய் ஈட்டவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் 25 முதல் 35 சதவிகிதம் வரை மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்களை தமிழக அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கி வருகிறது. படித்த வேலைவாயப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ,  (PMEGP)  புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில நிறுவன மேம்பாட்டுத் திட்டம்   (NEEDS)  மற்றும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்  (PMEGP)   ஆகிய மூன்று திட்டங்களின் மூலமும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடன் பெற்று சுயதொழில் தொடங்கி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.  இம்மூன்று திட்டங்களிலும் மகளிருக்கு 50சதவிகித ஒதுக்கீடு செய்யப்பட்டு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களுக்கான அழகு நிலையம், ஜவுளி வியாபாரம், தையல் தொழில், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், உடற்பயிற்சி நிலையங்கள், உணவுப் பொருட்கள் பதப...

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக. ஜெகன் பெரியசாமி போட்டியின்றி தேர்வு

  தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட திமுக சார்பில் அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீயிடம் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேறு யாரும் போட்டியிடாததால் ஜெகன் பெரியசாமி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேயருக்கான அங்கி, ஜெகன் பெலியசாமிக்கு அணிவிக்கப்பட்டு அவருக்கு 111 பவுன் தங்கச் செயின் மற்றும் வெள்ளி செங்கோலை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ வழங்கினார்