ஓருங்கிணைந்த தோ ட்டகலை துறை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பழ பயிர்கள் மற்றும் காய்கறி வகைகளுக்கு மானியம்.. விவசாயிகள் பயன் பெற மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
ஓருங்கிணைந்த தோ ட்டகலை துறை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பழ பயிர்கள் மற்றும் காய்கறி வகைகளுக்கு மானியம்.. விவசாயிகள் பயன் பெற மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறி மற்றும் பழப்பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை மூலம் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் 2020-2021 ஆம் ஆண்டிற்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 59 இலட்சங்கள் உத்தேச இலக்கு பெறப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை முறையில் வெண்டை, கத்தரி மற்றும் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.3இ750ஃ- வீதம் 90 ஹெக்டேருக்கும், சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரி சாகுபடிக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20இ000ஃ- வீதம் 125 ஹெக்டேருக்கும் சலுகைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், பந்தல் அமைத்து காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, பந்தல் அமைக்க ஒரு ஹெக்டேருக்கு 2 இலட...