முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 19, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்

  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கோவிந்தசாமி கலையரங்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகைப் பொருட்களை 400 நபர்களுக்கு மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்  வழங்கினார். ---------------------------- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கோவிந்தசாமி கலையரங்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (18.06.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு  மாத சம்பளமின்றி பணியாற்றும் அர...

சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த சேவை நிறுவனத்திற்கு விருது வழங்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தற்பொழுது பணிபுரியும் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த சேவை நிறுவனத்திற்கு கௌரவிக்கும் பொருட்டு சுதந்திர தின விழா விருதுகள் வழங்க தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப, அவர்கள் தகவல் ----------------------- சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெறும் சுதந்திரதின விழாவில் 2021ஆம் ஆண்டிற்கான பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவைபுரிந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தற்பொழுது பணிபுரியும் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த சேவை நிறுவனத்திற்கு கௌரவிக்கும் பொருட்டு சுதந்திர தின விழா விருதுகள் வழங்க ஆணை பெறப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை...