முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 8, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்து, அவதூறு பரப்பிய வாலிபர் கைது

  தூத்துக்குடி மாவட்டம், எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண் பாலியல் தொழிலுக்கு அழைப்பது போல்,  அந்தப் பெண்ணின் புகைப்படத்தை முகநூலில்  பதிவேற்றம் செய்து, அவதூறு பரப்பிய வாலிபர் கைது - கைது செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. கிருஷ்ணகிரி மாவட்டம், கங்காபிரம்பட்டி பட்டையூரைச் சேர்ந்த ராஜா மகன் மஞ்சுநாதன் (28) என்பவர், செல்போனில் ஒருவருக்கு அழைப்பு விடுக்கும்போது தவறுதலாக தூத்துக்குடி மாவட்டம், எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு திருமணமான இளம் பெண்ணுக்கு செல்போன் அழைப்பு விடுத்து பேசியுள்ளார். இதனையடுத்து மஞ்சுநாதன், தன்னை சகோதரனாக நினைத்து பேசுமாறு கூறி, அந்த இளம் பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.  நாளடைவில் அந்த பெண்ணின் முகத்தை பார்த்து பேச வேண்டும் என்பதற்காக மஞ்சுநாதன், அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று கடந்த மார்ச் மாதம் ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். செல்போனை பெற்றுக்கொண்ட அந்தப் பெண், தனது அடையாள அட்டையை பயன்படுத்...

மணப்பாடு மீனவர் கிராமத்தில் மணல் திட்டினை அகற்றி நாட்டு படகுகள் கடலுக்குள் வந்து செல்வதற்கு ஏதுவாக முகத்துவாரம் அமைக்கும் பணியினை : அமைச்சர் திரு.அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மணப்பாடு மீனவர் கிராமத்தில் மீன் வளத்துறையின் மூலம்  ரூ.15.50 லட்சம் மதிப்பிட்டில் மணல் திட்டினை அகற்றி நாட்டு படகுகள் கடலுக்குள் வந்து செல்வதற்கு ஏதுவாக முகத்துவாரம் அமைக்கும் பணியினை மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்கள் ---------------------------------- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மணப்பாடு மீனவர் கிராமத்தில் ரூ.15.50 லட்சம் மதிப்பிட்டில் மணல் திட்டினை அகற்றி நாட்டு படகுகள் கடலுக்குள் வந்து செல்வதற்கு ஏதுவாக முகத்துவாரம் அமைக்கும் பணியினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (07.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்து மணப்பாடு பகுதியில் வசிக்கும்  மீனவ மக்கள் 100 சதவிதம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தினார். அத...