சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை : தமிழகத்தின் , தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று முன்தினம் உருவானது . இது மேற்கு , வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்க அரபிக் கடல் பகுதிகளில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் . பின்னர் 21 ம் தேதி மேலும் வலுப்பெற்று மத்திய அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் . அதேபோல , வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது . இது நாளை (20 ம்தேதி ) மத்திய வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும் . மேலும் , தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இருந்து குமரிக் கடல் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது . இதன் காரணமாக தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !