முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 14, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். ------------------------------ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று (14.07.2021)  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு தன்னார்வலராக பணியாற்றிய 36 மாணவர்களுக்கும், 12 தொண்டு நிறுவனங்களுக்கும், 30 தன்னார்வலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நேரத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துள்ளீர்கள். மாவட்ட நிர்வாகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலர்களும், காவல் துறையின...

பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் உழவர்களின் கூட்டு நிறுவனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமலாபுரத்தில் உள்ள தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் உழவர்களின் கூட்டு நிறுவனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ரா ஜ் இ.ஆ.ப.இ அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். -------------------- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமலாபுரத்தில் உள்ள தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் உழவர்களின் கூட்டு நிறுவனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்  இ.ஆ.ப.இ அவர்கள் இன்று (14.07.2021)  நேரில் சென்று ஆய்வு செய்தார்.  விளாத்திகுளம் காமலாபுரத்தில் 1118 விவசாயிகளின் பங்களிப்புடன் தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் உளுந்துஇ பாசி பயறு  சிறுதானியங்கள் உட்பட பல்வேறு விதைகள் தரம் பிரிக்கப்பட்டு முதல் தர விதைகள் சான்றிதழுடன் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் பணிகள் மற்றும் பயறு வகைகள் தோல் உரிக்கப்பட்டு மதிப்பு கூட்டு பொருளாகி விற்பனை செய்யும் பணிகள்இ செக் நல்லெண்ணெய் ,  கடலை எண்ணெய் ,  தேங்காய் எண்ணெய் ,  சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்கள்...