வந்து போகும் இரு சக்கர வாகனம் ... தினமும் நொந்து போகும் பொதுமக்கள் .
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் இரு சக்கர வாகன பாதுகாப்பகம் இயங்கி வருகிறது. இது முன்பு தனியாரால் நடத்தப்பட்டு தற்போது மாநகராட்சி நிர்வாகமே இந்த இரு சக்கர வாகன பாதுகாப்பகத்தை இயக்கி வருகிறது. புதிய பேருந்து நிலைத்துக்கு வரும் பயணிகளுக்கு இந்த இரு சக்கரவாகன பாதுகாப்பகம் அதிகம் பயன் உள்ளதாக இருக்கிறது. இந்த வாகன பாதுகாப்பகத்தில் இரு சக்கர வாகனத்தை கொண்டு வருகின்ற வாடிக்கையாளரிடம் 12 மணி நேரத்திற்கு ஐந்து ரூபாய் கட்டணம் என வசூல் செய்யப்படுகிறது . இந்த வாகன பாதுகாப்பகத்தில் நுழைவு வாசல் ஒன்றும் வெளியேற மற்றொறு வாசல் என அமைக்கப்பட்டுள்ளது.. நுழைவு வாயில் வழியாக உள்ளே வரும் வாகனங்களின் எண் மற்றும் விவரங்கள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்...