முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 11, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் நலிவடைந்தவர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்

  தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் மகளிர் திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்கள். ------------------------- தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா கூட்டரங்கம் மற்றும் கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் இன்று (11.06.2021) நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு, தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்தவர்கள் 100 நபர்களுக்கும், கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் 50 நபர்களுக்கும் என மொத்தம் 150 நபர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.  பின்னர் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீ...

குழந்தைதொழிலாளர் எதிர்ப்பு தினம் : உறுதிமொழி. ஏற்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைதொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் தலைமையில் நடைபெற்றது --------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைதொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் தலைமையில் இன்று (11.06.2021) நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அகற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன என உறுதி மொழி எடுக்கப்பட்டது. நிகழ்;ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, அலுவலக மேலாளர் திரு.இளங்கோ, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் திரு.ஆதிநாராயணன், திட்ட மேலாளர் திரு.செல்வம், மாவட்ட குழந்தை ...