முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 8, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில் திருடு போன 11 லட்சம் மதிப்பிலானா நகைகள் கண்டு பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்பிக் நகரில் திருடு;போன சுமார் ரூபாய் 11 லட்சம் மதிப்பிலான 40 சவரன் தங்க நகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உரிமையாளரிடம் நேரில் ஒப்படைத்தார்.  தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் ஸ்பிக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிலுவை சகாயம் மகன் வின்ஸ்டன் அந்தோணி சேவியர் (வயது 31), ஸ்பிக் ஆலையில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வரும் இவர் தனது குடும்பத்துடன் ஸ்பிக் குடியிருப்பில் "சி" பிளாக்கில் வசித்து வருகிறார். இந்நிலையில் 26.03.2020 அன்று மாலை வின்ஸ்டன் அந்தோணி சேவியர் தனது மனைவி ஜேசு சகாயம் மோனிகாவுடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். வீட்டை பூட்டியவர் சாவியை, அங்கேயே எங்கோ ஒரு இடத்தில் விட்டுச் சென்றிருக்கிறார்.   சென்றவர்கள் மறுநாள் மாலை வீடு திரும்பியபோது சாவி இல்லாததால், இன்னொரு சாவியை வைத்து திறந்து வீட்டிலிருந்துள்ளார். அதன் பின்னரே வீட்டிலிருந்த சுமார் 40 பவுன் நகைகள் களவு போயுள்ளது தெரியவந்துள்ளது. அதன் பின்னரே 28.03.2020 அன்று வின்ஸ்டன் அந்தோ...

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருக்கு முககவசம் - கிருமி நாசினி - பைபர் முகத்திரை போன்றவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.

  தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு 12000 முகக்கவசம், 1800 கிருமி நாசினி பாட்டில்கள் மற்றும் பைபர் முகத்திரைகள் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று வழங்கினார்.    தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள தூத்துக்குடி மாநகரம், தூத்துக்குடி ஊரகம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், விளாத்திக்குளம், கோவில்பட்டி, மணியாச்சி ஆகிய 8 உட்கோட்டங்களில் பணிபுரியும் காவல்துறையினர் உட்பட அனைத்து காவல்துறையினருக்கும் 12000 முகக் கவசங்கள், 1800 கிருமி நாசினி பாட்டில்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினருக்கு 50 பைபர் முகத்திரைகள் ஆகியவற்றை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு ஒவ்வொரு உட்கோட்ட வாரியாக அனைத்து உட்கோட்ட காவல்துறையினருக்கும் இன்று (08.08.2020) மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.  இதற்கான ஏற்பாடுகளை ஏகம் என்ற அமைப்பு சார்பாக செய்திருந்தனர். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. செல்வன் மற்றும் திரு. கோபி, தூ...

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வரின் உரை

  7.8.2020  அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்கள் தலைமையில் திருநெல்வேலி மாவட்டஆட்சித்தலைவர்அலுவலகத்தில்நடைபெற்ற திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது  கூட்டத்தில்  .... உலகில் உள்ள  மக்கள் அனைவரும்    அச்சத்தில்  வாழ்கின்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்என்றதொற்றுநோய்தமிழகத்திலும் பரவியுள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு சிறப்புத் திட்டங்களை வகுத்து, அதன்மூலம் நோய்ப் பரவல் குறைக்கப்பட்டிருக்கிறது.இந்தியாவிலேயே,தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும்அதிகரித்துள்ளது.இறப்பு சதவிகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குத்தேவையான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான படுக்கை வசதிகள் ஏற்...