
11-01-2019 தூத்துக்குடி மக்களுக்காக வரவிருக்கும் மாதங்களில் பெரியஅளவிலான வளர்ச்சிசெயல் திட்டங்கள் பல தொடங்க விருப்பதை " ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அறிவித்திருக்கிறது. ரூபாய் 100 / கோடி மதிப்பில் திட்டமிடபட்டிருக்கிற இந்த முதலீட்டில் கீழ் செயல்படவிருக்கும் திட்டங்களில், தூத்துக்குடி மாநகரின் முன்னேற்றம் மற்றும், புத்துயிர் பெற்ற வளர்ச்சியை, முடுக்கி விடுவதை இலக்காக கொண்ட பல் வேறு முனைப்பு திட்டங்கள், உள்ளடங்கும் . தொழில் துறை மற்றும் பொதுமக்கள் ஆகிய இரு தரப்பின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு புதிய ஸ்மார்ட் பள்ளி, உலகத்தரம் வாய்ந்த ஒரு மருத்துவமனை, கடல்நீரை தூய்மையாக்கி குடிநீராக்கும் ஆலை, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொழில் முனைவு திறன் ஆகியவற்றின் மீது சிறப்புகவனம்.செலுத்தும் , இளைஞர் மேம்பாடு. திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. தூத்துக்குடி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பசுமையை மேம்படுத்த பத்து லட்சம் மரக்கன்றுகள் நடவும் இந்த நிறுவனம் உறுதி கொண்டு திட்டங்களை செயல்படுத்தப்படஉள்ளன. இதனால் தூத்துக்குடி வாழ் மக்களின் வாழ்க்கையில் ஆக்கப் பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் உலகத்தரம் வாய்ந்த கல்வி, மற்றும் உடல் பராமரிப்பு சேவைகள் தூத்துக்குடி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்த்துடன் கூடிய இந்த திட்டங்களை ஸ்டெர்லைட் அமல்படுத்த படவிருக்கிறது. இச்செயல் திட்டங்கள் குறித்து பேசிய ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை செயல் தலைவர் "20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமும், தூத்துக் குடி நகரமும், கொண்டிருந்த நெருக்கமாக பின்னி பினைந்த நல்லுறவையும், வளர்ச்சியை இலக்காக கொண்ட குறிக்கோளையும் இந்த புதிய செயல்திட்டங்கள் இன்னும் வலுவாக உதவும் என்பது எங்களது நம்பிக்கையாகும், இன்றைய உலக தொழில் நுட்ப ரீதியில் மிக நவின உருக்காலைகளுள் ஒன்றாக ஸ்டெர்லைட் காப்பர் வளர்ந்து உயந்திருப்பது தூத்துக்குடி வாழ் மக்களின் ஆதரவு மற்றும் ஆசிர்வாதங்களினால் தான் இது சாத்தியமாயிற்று. இன்று புதிப்பிக்கப்பட்ட நம்பிக்கையோடு முன்னேற்றத்தை நோக்கி எமது பயணத்தை தொடர்வதையும், மற்றும் எமது நல்லுறவையும், இன்னும் உச்சத்திற்கு எடுத்து செல்வதையும் நாங்கள் ஆவலோடு எதிர் நோக்கி இருக்கிறோம் என்று கூறினார். ஸ் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் சமீபத்தில் தொடங்கப்பட உங்களுடன் நான் உங்களுக்காக ஸ் டெர்லைட் என்ற பெயரில் ஸ்டெர்லைட் தலைமை செயல் அலுவலர் சமூக தொடர்பு முனைப்பு திட்டத்தின் தொடர் நிகழ்வாக இப் புதி ய செயல் திட்டங்கள் தூத்துக்குடி மக்களின் நலனுக்காக தீட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.