அம்மாவாசை தினத்தில் கடற்கரை மற்றும் ஆற்றங்கரையில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க காவல் துறை வேண்டு கோள்
கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், குற்றவியல் விசாரணை நடைமுறைச்சட்டம் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாலும் நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடி அமாவாசை நாளில் சடங்கு, சம்பிரதாயங்கள் செய்வதற்காக தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் கடற்கரையோரங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு பாய்ந்து செல்லும் வழிகளில் ஆற்றங்கரை ஓரங்களில் அமைந்துள்ள முக்கிய படித்துறைகளில்மற்றும்கடற்கரையோரங்களில் ஆண்டுதோறும் ஆடி, அமாவசை நாளில் அதிக அளவில் பொதுமக்கள் ஒன்று கூடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கும் திதி, தர்ப்பணம் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதும் நீராடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் க...