முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 5, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை. அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் துவக்கி வைத்தார்

      தூத்துக்குடி. மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் துவக்கி வைத்தார். ---------------------- தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  அவர்கள் தலைமையில் இன்று (05.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.மார்க்கண்டேயன் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது, சுகாதாரத்துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியினை மாண்புமிக...

நாசரேத் கராத்தே மாணவர்கள் மாநில அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வு

        நாசரேத் கராத்தே மாணவர்கள் மாநில அளவிலான  கராத்தே போட்டிக்கு தேர்வு தூத்துக்குடியில் சாரா கலை பள்ளியில் வைத்து கடந்த  23- 07-2021 வெள்ளி கிழமை அன்று    தூத்துக்குடி மாவட்ட அச்சிவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில்  நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள், மாநில கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றனர் .  போட்டியில் வெற்றி பெற்று  மாநில போட்டிக்கு  தகுதி பெற்ற முன்னாள் அமைச்சரும்,  அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதன் பரிசு வழங்கி வாழ்தினார். இதில் அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் திருப்பார்கடல், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசி; மற்றும் பலர் கலந்து கொண்டு ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கனையும் பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் டென்னிசன்னை பாராட்டினார்கள்.