தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் இரு சக்கர வாகன பாதுகாப்பகம் இயங்கி வருகிறது. இது முன்பு தனியாரால் நடத்தப்பட்டு தற்போது மாநகராட்சி நிர்வாகமே இந்த இரு சக்கர வாகன பாதுகாப்பகத்தை இயக்கி வருகிறது. புதிய பேருந்து நிலைத்துக்கு வரும் பயணிகளுக்கு இந்த இரு சக்கரவாகன பாதுகாப்பகம் அதிகம் பயன் உள்ளதாக இருக்கிறது.
இந்த வாகன பாதுகாப்பகத்தில் இரு சக்கர வாகனத்தை கொண்டு வருகின்ற வாடிக்கையாளரிடம் 12 மணி நேரத்திற்கு ஐந்து ரூபாய் கட்டணம் என வசூல் செய்யப்படுகிறது . இந்த வாகன பாதுகாப்பகத்தில் நுழைவு வாசல் ஒன்றும் வெளியேற மற்றொறு வாசல் என அமைக்கப்பட்டுள்ளது.. நுழைவு வாயில் வழியாக உள்ளே வரும் வாகனங்களின் எண் மற்றும் விவரங்கள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டு ஸ்மார்ட் கார்டு போன்ற டோக்கன் வழங்கப்படுகிறது. முற்றிலும் நவின படுத்தப்பட்ட இந்த இரு சக்கர வாகன பாதுகாப்பகத்தில் அடிப்படை வசதிகள் என்பது முற்றிலும் இல்லை. சீரமைக்கப்படாத கரடு முரடான தரை, ஒழுங்கற்ற வரிசை, இரவு நேரத்தில் போதிய மின் விளக்கு வசதி இல்லை, பாதிக்குமேல் மேற்கூரை இல்லாததிறந்த வெளியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்ற நிலை தொடர்கிறது. மேலும் திருமண முகூர்த்தநாளில்...வாகணங்களின் எண்ணிக்கை அதிகமாவதால் ...வாகணநெரிசல் ஏற்பட்டு இரு சக்கரவாகணம் ஒன்றுக்கொன்று பின்னி சிக்கிக்கொள்வதால் இருசக்கர வாகனத்தை வெளியே எடுப்பதில் சிரமமும் ஏற்படுவதுடன் . வாகணங.கள். அதிகமாக சேதம் அடைகிறது. வாகண பாதுகர்ப்பகத்தில் ..நிர்வாகத்தின் அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டல்கள் பொதுமக்கள் பார்வையில் படும்படி ஆங்காங்கே வைக்கவேண்டும்.