முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வந்து போகும் இரு சக்கர வாகனம் ... தினமும் நொந்து போகும் பொதுமக்கள் .

             
 தூத்துக்குடி  புதிய பேருந்து  நிலையம் அருகில் இரு சக்கர வாகன பாதுகாப்பகம்  இயங்கி வருகிறது.   இது முன்பு தனியாரால் நடத்தப்பட்டு  தற்போது மாநகராட்சி நிர்வாகமே  இந்த இரு சக்கர வாகன பாதுகாப்பகத்தை இயக்கி வருகிறது. புதிய பேருந்து நிலைத்துக்கு வரும் பயணிகளுக்கு  இந்த இரு சக்கரவாகன பாதுகாப்பகம் அதிகம் பயன் உள்ளதாக இருக்கிறது.                                                    
            இந்த வாகன பாதுகாப்பகத்தில் இரு சக்கர வாகனத்தை கொண்டு வருகின்ற வாடிக்கையாளரிடம் 12 மணி நேரத்திற்கு ஐந்து ரூபாய் கட்டணம்  என வசூல் செய்யப்படுகிறது . இந்த வாகன பாதுகாப்பகத்தில்  நுழைவு வாசல் ஒன்றும் வெளியேற மற்றொறு வாசல் என   அமைக்கப்பட்டுள்ளது..  நுழைவு வாயில் வழியாக உள்ளே வரும் வாகனங்களின் எண் மற்றும் விவரங்கள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டு ஸ்மார்ட் கார்டு போன்ற டோக்கன் வழங்கப்படுகிறது.   முற்றிலும்   நவின படுத்தப்பட்ட இந்த இரு சக்கர வாகன பாதுகாப்பகத்தில்  அடிப்படை வசதிகள் என்பது முற்றிலும் இல்லை.    சீரமைக்கப்படாத  கரடு முரடான தரை, ஒழுங்கற்ற வரிசை, இரவு நேரத்தில் போதிய  மின் விளக்கு  வசதி இல்லை,   பாதிக்குமேல் மேற்கூரை  இல்லாததிறந்த வெளியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்ற நிலை தொடர்கிறது.  மேலும்  திருமண முகூர்த்தநாளில்...வாகணங்களின் எண்ணிக்கை  அதிகமாவதால் ...வாகணநெரிசல் ஏற்பட்டு இரு சக்கரவாகணம்  ஒன்றுக்கொன்று  பின்னி சிக்கிக்கொள்வதால் இருசக்கர வாகனத்தை வெளியே எடுப்பதில்  சிரமமும்  ஏற்படுவதுடன் . வாகணங.கள். அதிகமாக சேதம் அடைகிறது.  வாகண பாதுகர்ப்பகத்தில்  ..நிர்வாகத்தின் அறிவிப்புகள்  மற்றும்  வழிகாட்டல்கள்  பொதுமக்கள் பார்வையில் படும்படி ஆங்காங்கே வைக்கவேண்டும்.

            எனவே   தூத்துக்கடி மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும்  இந்த இருசக்கர வாகண பாதுகாப்பகம்  முறையாக சீரமைக்கபட்டு  போதிய விரிவாக்கம்  செய்யப்படவேண்டும்.   என்பது  பொது மக்களின் எதிர்பாக உள்ளது.  இது தொடர்பாக  மாநகராட்சி நிர்வாகம்  உடனடியாக நடவடிக்கை எடுக்கமா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...