முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

.ரூ 8 லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரி கரை பலப்படுத்தும்; பணிகள் . மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைப்பு


 குலையன்கரிசல் ஊராட்சியில் இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் தூத்துக்குடி சமூக பொறுப்பு நிதி ரூ8லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரி கரை பலப்படுத்தும்; பணிகளை  ளை  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி , இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
------------------------------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குலையன்கரிசல் ஊராட்சியில் இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் தூத்துக்குடியின் சமூக பொறுப்பு நிதி ரூ.8 லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரி கரை பலப்படுத்தும் பணிகள் துவக்க நிகழ்ச்சி இன்று (31.07.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு, கண்மாய் வடிகால் வாய்க்கால் தூர்வாரி கரை பலப்படுத்தும்  பணிகளை துவக்கி வைத்தார்.  
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடிமராத்து திட்டம் என்ற அற்புதமான திட்டத்தினை தமிழகம் முழுவதும் செயல்படுத்திட உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்திலும் ஒவ்வொரு ஆண்டும் குடிமராமத்து திட்டத்தின்கீழ் பல்வேறு கண்மாய்கள் தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொதுப்பணித்துறை மூலம் 37 கண்மாய்கள் ரூ.13.15 கோடி செலவில் தூர்வாரப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கார்பரேட் நிறுவனங்கள் சமூக பொறுப்பு நிதியின் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று மழைநீரினை சேமித்து நிலத்தடி நீர் உயர்த்துவதற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் பல்வேறு இடங்களில் கண்மாய்கள் தூர்வாரி ஆழப்படுத்தப்படுகிறது. மேலும் கண்மாய்களை தூர்வாறுவதால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
இந்த வகையில் இன்று புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குலையன்கரிசல் ஊராட்சியில் இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் தூத்துக்குடி சமூக பொறுப்பு நிதி ரூ.8 லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரி கரை பலப்படுத்தும்; பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. வடிகால் வாய்க்காலினை ஆழப்படுத்தி 4.8 கிலோமீட்டர் தூரம் கரைகளை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைவில் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலினை சீரமைப்பதன்; மூலம் சுமார் 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அத்திமரப்பட்டி, பொட்டல்காடு, குலையன்கரிசலம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் கண்மாயில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரினை வாய்க்கால் மூலம் கொண்டு சென்று பயன்படுத்தி விவசாயம் செய்து பயன்பெற முடியும்.  
ஏற்கனவே, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பையூரணி ஊராட்சி நெடுங்குளம் கண்மாயில் தூத்துக்குடி விமான நிலைய சமூக பொறுப்பு நிதி ரூ.28.30 லட்சம் செலவில் கண்மாயினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கண்மாய், ஏரி, குளங்;கள் தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. பல்வேறு திட்டங்களின் மூலம் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் தூர்வாரி ஆழப்படுத்துவதால் தண்ணீரினை அதிக அளவு சேமித்து வைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். 
நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., தூத்துக்குடி வட்டாட்சியர் திரு.செல்வகுமார், இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் தூத்துக்குடி துணை பொது மேலாளர் திரு.கௌதம், முதன்மை கட்டுமான மேலாளர் திரு.முருகேசன், கட்டுமான மேலாளர் திரு.ரமேஷ்பாபு, குலையன்கரிசல் விவசாய சங்க தலைவர் திரு.சுபாஸ் செல்வகுமார், செயலாளர் திரு.ஜெகன், கௌரவ தலைவர் திரு.சுரேஷ், முக்கிய பிரமுகர் முள்ளக்காடு திரு.அழகேசன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...