சாயர்புரம் பகுதியில் புதிய சி சி டி வி கேமிரா - தூத்துக்குடி மாவட்ட காவல் துறை எஸ்.பி திரு ஜெயக்குமார் திறந்து வைப்பு
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்றாவது கண் எனப்படும் சி.சி.டி.வி கேமராவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி, சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலை மற்றும் மஞ்சள்நீர்காயல் ஆகிய பகுதிகளில் முக்கிய இடங்களில் 19 சி.சி.டி.வி கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. சாலை பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 7 சி.சி.டி.வி கேமராக்களை பேய்குளம் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்திலும், மஞ்சள்நீர்காயலில் புதிதாக அமைக்கப்பட்ட 12 சி.சி.டி.வி கேமராக்களை மஞ்சள்நீர்காயலில் உள்ள காமராஜர் மாளிகையிலும் இன்று (16.10.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த சி.சி.டி.வி கேமராக்கள் பேய்க்குளம் ஆர்ச் அருகில் 3 கேமராக்களும், பழைய காயல் ரோடு ஜங்ஷன் பகுதியில் 3 கேமராக்களும் மற்றும் சாலை ரோடு பகுதியில் 1 கேமராவும் ஆக மொத்தம் 3 இடங்களில் 7 கேமராக்களும், மஞ்சள்நீர்காயலில் மஞ்சள்நீர்காயல் விளக்கு பகுதியில் 2 கேமராக்களும், மெயின் தெருவில் 1 கேமராவும், புளியமரம் ஜங்ஷன் பகுதியில் 1 கேமராவும், முத்துமாலையம்மன் கோவில் உட்புறம் 1 கேமராவும் , வெளியே 2 கேமராக்களும், காமராஜர் மண்டபம் முன்பு 1 கேமராவும், நாலு முக்கு ரோடு பகுதியில் 1 கேமராவும், வடக்கு தெரு ஜங்ஷனில் 1 கேமராவும், பள்ளிகூடத் தெருவில் 2 கேமராக்களும் ஆக மொத்தம் 9 இடங்களில் 12 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், குற்றங்களை குறைப்பதற்கு சி.சி.டி.வி கேமரா என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்த கேமரா பொருத்துவதன் மூலம் இரண்டு நன்மைகள். ஓன்று குற்றங்கள் நடக்காமல் தடுப்பது, மற்றொன்று நடந்த குற்றத்தை கண்டுபிடிப்பது. காவல்துறையில் 90 சதவீதம் சி.சி.டி.வி கேமரா மூலமே உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்றனர். சென்னையில் அனைத்து இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் குற்றங்கள் 50 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லோரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்வின் போது ஸ்ரீவைகுண்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன், ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி, உதவி ஆய்வாளர் திரு. அருள் சாம்ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சண்முகநாதன், சமூக ஆர்வலர் திரு. சங்கர்; மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக