முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் - காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட - எஸ்.பி பாராட்டு

 


தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 20 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

 

கடந்த 30.01.2020 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செயின் பறிப்பில் வழக்கின் எதிரியை கைது செய்து அவரிடம் இருந்து ரூபாய் 1,00,000ஃ- மதிப்புள்ள 5 சவரன் நகையை பறிமுதல் செய்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஐயப்பன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்ற பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் திரு. முருகன் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர் திரு. ஸ்ரீராம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,


கடந்த 03.02.2021 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் நடந்த செயின் பறிப்பு வழக்கின் எதிரிகள் 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 2,28,000ஃ- மதிப்புள்ள 7 சவரன் நகையை பறிமுதல் செய்த கயத்தாறு காவல் நிலையம் ஆய்வாளர் திரு. முத்து, உதவி ஆய்வாளர் திரு. அரி கண்ணன், காவலர்கள் திரு. பாலகிருஷ்ணன், திரு பாலமுருகன், திரு. சத்ரியன், திரு. குருசாமி, திரு. கார்த்திக் ஊர்க்காவல் படை காவலர், திரு. சங்கர் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,


குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் திருட்டு சம்பந்தமாக பல்வேறு இடங்களில் ரோந்து செய்ததில் சட்டவிரோதமாக 6 இரு சக்கர வாகனங்களில் தலா 5 மூடை மணலுடன் வந்தவர்களை கைது செய்து மணலை கைப்பற்றி குளத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. கங்கைநாத பாண்டியன், முதல்நிலைக் காவலர்கள் திரு. செல்வகுமார், திரு. இராசையா, காவலர் திரு. ஜோசப் சந்திரசேகர் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் காணாமல் போன வயதான பெண்மணி மாரியம்மாள் என்பவர் நாலாட்டின்புதூர் சரவணபவன் ஹோட்டல் அருகில் நின்றவரை கண்டுபிடித்து அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்த நாலாட்டின்புதூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சீனிவாசன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர் திரு. ஜெயராஜ் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,


2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 17 எதிரிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உதவியாக இருந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராய்ஸ்டன், தட்டப்பாறை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. அசோக்குமார் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்.

  

2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 20 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 


 இப்பாராட்டு நிகழச்சியின்போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வன் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்