கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் - காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட - எஸ்.பி பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 20 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கடந்த 30.01.2020 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செயின் பறிப்பில் வழக்கின் எதிரியை கைது செய்து அவரிடம் இருந்து ரூபாய் 1,00,000ஃ- மதிப்புள்ள 5 சவரன் நகையை பறிமுதல் செய்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஐயப்பன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்ற பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் திரு. முருகன் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர் திரு. ஸ்ரீராம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 03.02.2021 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த செயின் பறிப்பு வழக்கின் எதிரிகள் 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 2,28,000ஃ- மதிப்புள்ள 7 சவரன் நகையை பறிமுதல் செய்த கயத்தாறு காவல் நிலையம் ஆய்வாளர் திரு. முத்து, உதவி ஆய்வாளர் திரு. அரி கண்ணன், காவலர்கள் திரு. பாலகிருஷ்ணன், திரு பாலமுருகன், திரு. சத்ரியன், திரு. குருசாமி, திரு. கார்த்திக் ஊர்க்காவல் படை காவலர், திரு. சங்கர் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் திருட்டு சம்பந்தமாக பல்வேறு இடங்களில் ரோந்து செய்ததில் சட்டவிரோதமாக 6 இரு சக்கர வாகனங்களில் தலா 5 மூடை மணலுடன் வந்தவர்களை கைது செய்து மணலை கைப்பற்றி குளத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. கங்கைநாத பாண்டியன், முதல்நிலைக் காவலர்கள் திரு. செல்வகுமார், திரு. இராசையா, காவலர் திரு. ஜோசப் சந்திரசேகர் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் காணாமல் போன வயதான பெண்மணி மாரியம்மாள் என்பவர் நாலாட்டின்புதூர் சரவணபவன் ஹோட்டல் அருகில் நின்றவரை கண்டுபிடித்து அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்த நாலாட்டின்புதூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சீனிவாசன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர் திரு. ஜெயராஜ் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 17 எதிரிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உதவியாக இருந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராய்ஸ்டன், தட்டப்பாறை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. அசோக்குமார் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்.
2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 20 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இப்பாராட்டு நிகழச்சியின்போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வன் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக