முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்

 



தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கோவிந்தசாமி கலையரங்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகைப் பொருட்களை 400 நபர்களுக்கு மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்  வழங்கினார்.

----------------------------



தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கோவிந்தசாமி கலையரங்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (18.06.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு  மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள், காது குத்து மற்றும் முடி இறக்கும் தொழிலாளிகள் 400 நபர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகைப் பொருட்களை  வழங்கினார். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சண்முகையா அவர்கள் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா நிவாரண உதவித்தொகையாக ரூ.5000 கொடுக்க வேண்டும் என கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்க வேண்டும் என தெரிவித்தார்கள். கடந்த ஆட்சிக்காலத்தில் ரூ.1000 மட்டுமே வழங்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.4000 வழங்கியுள்ளார்கள். கொரோனா நோய் தொற்று காலத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். கொரோனா நோயை கட்டுப்படுத்த பணிகளில் சிறப்பாக பணியாற்ற அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் உத்தரவிட்டார்கள். கொரோனா நிவாரண தொகை திருக்கோவிலில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள், காது குத்து மற்றும் முடி இறக்கும் தொழிலாளிகள் ஆகியோர்களுக்கு வழங்கி துவக்கி வைத்துள்ளார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 400 நபர்களுக்கு ரூ.4000, 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகைப்பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கைங்கர்யம் மற்றும் உதவி கைங்கர்யம் செய்யும் சிவாச்சாரியார்கள் 57 பேர், வெங்கடாசலாபதி சன்னதி கைங்கர்யஸ்தர்கள் 12 பேர், காதுகுத்து சேவை தொழிலாளர்கள் 4 பேர், முடி இறக்கும் தொழிலாளர்கள் 61 பேர், தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்திற்கு கீழ் இயங்கும்  திருக்கோவில் அர்ச்சகர்கள் 251 பேர், செயல் அலுவலர் கட்டுப்பாட்டில் மாத சம்பளம் பெறாத திருக்கோவில் பூசாரிகள் 15 பேர் என மொத்தம் 400 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 


நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஸ்சிங், இ.கா.ப., திருச்செந்தூர் கோட்டாட்சியர் திருமதி.கோகிலா, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் திரு.அன்புமணி, உதவி ஆணையர் திரு.செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி.ரோஜாலிசுமதா, முக்கிய பிரமுகர்கள் திரு.உமாசங்கர், திரு.நவீன்குமார், திரு.எஸ்.ஜெ.ஜெகன், திரு.செங்குளிரமேஸ், திரு.வால்சுடலை, திரு.சுரேஷ், திரு.சுதாகர், திரு.இளங்கோ மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...