சிறுபான்மையின மாணவ - மாணவியர்களுக்கு. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

 


03.11.2022


சிறுபான்மையின                                மாணவ - மாணவியர்களுக்கு.            மத்திய அரசின் கல்வி உதவித்தொகை       விண்ணப்பிக்க கால நீட்டிப்பு          தூத்துக்குடி  மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்


            தமிழ்நாட்டில் வசிக்கும் இசுலாமியர், கிறித்துவர், சீக்கியர், பார்சி, ஜெயின் மற்றும் புத்த மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய -  மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ஆம் கல்வியாண்டில் பள்ளி படிப்பு (ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை)பயிலும் மாணவஃமாணவியர்கள் விண்ணப்பிப்பதற்கு 15.11.2022 வரையிலும், பள்ளி மேற்படிப்பு (11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை) மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி (தொழிற்கல்வி- தொழில்நுட்பக்கல்வி) பயிலும் மாணவ - மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு கால அவகாசம் 30-11-2022 வரை, மத்திய அரசு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தவிர, பேகம் அஸ்ரத் மகால் தேசிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் 15-11-2022 கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

          மேற்படி,கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியுள்ள சிறுபான்மை மாணவஃமாணவியர்    www.scholarships.gov.in  என்ற இணையதளத்தில்; விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


கருத்துகள்