மாலத்தீவிலிருந்து பிற மாநிலங்களைசார்ந்தவர்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சி துறை முகத்திற்கு வருகை


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு மாலத்தீவில் இருந்து இந்திய கடற்படையை சேர்ந்த JALASHWA ல் மூலம் வருகை தந்;த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 198 நபர்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.06.2020) 
வரவேற்றார். பின்னர் பயணிகள் கப்பலில் இருந்து இறங்கியதுடன் கைகளை சுத்தம் செய்வதற்கு 
சாணிடைசர் வழங்கப்பட்டதையும், பயணிகளின் உடமைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, உடல் 
வெப்பநிலை கண்டறிவதற்கு தெர்மல் ஸ்கிரினிங் செய்யும் பணிகளையும் பார்வையிட்டார். 
  மேலும் பேருந்துகளில் பயணிகளை அழைத்து சென்று காத்திருப்போர் அறையில் மாவட்ட 
வாரியாக பிரித்து குடிவரவு நுழைவு மற்;றும் உடைமைகளை சோதனை செய்யும் பணிகளையும், பயணிகளுக்கு மதிய உணவு குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை வழங்கி மீண்டும் பேருந்துகளில் சொந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் பணிகளையும் நேரில் சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் 
அவர்கள் பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: 
 தூத்துக்குடி மாவட்டத்திற்கு இலங்கை நாட்டில் இருந்தும், மாலத்தீவில் இருந்தும் ஏற்கனவே 
இந்திய கடற்படையை சேர்ந்த துயுடுயகப்பல் மூலம் தமிழகம் மற்றும் பிற JALASHWA மாநிலத்தை சேர்ந்த 
சுமார் 1,400 நபர்கள் வருகை தந்தார்கள். அவர்கள் அனைவரும் முறையான பரிசோதனை செய்யப்பட்டு சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று (23.06.2020) மாலத்தீவில் இருந்து AIR AVAT கப்பல் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த 64 பயணிகளும், தூத்துக்குடி, 
திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்களை சார்ந்த பயணிகளும், புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த 
3 பயணிகளும் என சுமார் 200 நபர்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளார்கள். அவர்களுக்கும், தெர்மர் ஸ்கிரினிங் செய்யப்பட்டு, குடிவரவு நுழைவு மற்றும் பயணிகள் உடைமைகள் சோதனைகள் செய்யப்பட்டு, மாவட்ட வாரியாக பிரித்து உணவு, குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை வழங்கி பேருந்துகள்மூலம்சொந்தமாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகம் மற்றும் தூத்துக்குடி 
சுங்கத்துறை அலுவலர்களால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. கப்பலில் வருகை தந்த பயணிகள் சொந்த மாவட்டத்திற்கு சென்றதுடன் தனிமைபடுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டு முதல் கட்டமாக 
கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்பின்னர் 7 நாட்களுக்கு பிறகு மறுபடியும் 
அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படும். இதில் தொற்று இல்லாத நபர்களை 
அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்து தனிமைபடுத்தப்படும். தொற்று உள்ள நபர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துசிகிச்சைஅளிக்கப்படும். வருகிற 28ம் தேதி ஈரான் நாட்டில் இருந்து இந்திய கடற்படையை சேர்ந்த JALASHWA கப்பல் மூலம் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கடலோர மாவட்டத்தை சேர்ந்த சுமார் 700 மீனவர்கள் தூத்துக்குடிதுறைமுகத்திற்கு வருகை தர உள்ளார்கள். அதற்கான ஏற்பாடுகள் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகத்தின் மூலம்; நடைபெற்று  வருகிறது                                          தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 22,650 நபர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. தினம்தோறும் சுமார் 650முதல் 700 வரை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக தொற்று உள்ள நபர்களின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு 100 சதவீதம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவுப்படி, நோய்கட்டுபாட்டு பகுதியில்உள்ளபொதுமக்களுக்கு சுகாதார துறை அலுவலர்கள் மூலம் உடல் நிலை குறித்து பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நபர்களின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலைதொடர்பா ளர்களை கண்டறிய ப்பட்டுபரிசோதனை செய்வதால், மேலும்நோய்வராமல் தடு க்கப்படுகிறது. கொரோனா தொற்று உள்ள நபர்களின் விவரங்கள் அனைத்தும் சரியான முறையில் சேகரிக்கப்பட்டு வருவதால் சமூக பரவல் ஏற்படாதவகையில்அனைத்துநடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. ஆகவே நமது மாவட்டத்திற்கு சுய ஊரடங்கு உத்தரவு தற்போது தேவை இல்லை எனவும், தமிழகஅரசின்வழிகாட்டுதலின்படிமாவட்டநிர்வாகத்தின் மூலம்கொரோனா  தொற்று தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) திரு.விஷ்ணுசந்திரன், இ.ஆ.ப., சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.பிரித்திவிராஜ், இ.ஆ.ப., துறைமுக பொறுப்பு கழக முதன்மை பொறியாளர் திரு.ரவிக்குமார், தூத்துக்குடி சுங்கத்துறை ஆணையர் 
திரு.அணில், இணை ஆணையர் திரு.வெங்கடேஸ்வரன், உதவி ஆணையர் திரு.ஓமண்ஜோசப், 
திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்கள் திரு.அப்துல்காசிம் (பொது), திரு.பாலசுப்பிரமணியன் (வளர்ச்சி),உதவிஇயக்குநர்(ஊராட்சிகள்) திரு.உமாசங்கர், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணைஆட்சியர்திரு.சங்கரநாராயணன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மரு.மாரியப்பன், துறைமுக பொறுப்பு கழக மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சசிகுமார், வட்டாட்சியர்கள் திரு.செல்வகுமார் (தூத்துக்குடி), திரு.ரகு (ஓட்டப்பிடாரம்) மற்றும்அலுவலர்கள்கலந்துகொண்டனர். 

கருத்துகள்