திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வரின் உரை

 

7.8.2020  அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்கள் தலைமையில் திருநெல்வேலி மாவட்டஆட்சித்தலைவர்அலுவலகத்தில்நடைபெற்ற திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது 

கூட்டத்தில்  .... உலகில் உள்ள  மக்கள் அனைவரும்    அச்சத்தில்  வாழ்கின்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்என்றதொற்றுநோய்தமிழகத்திலும் பரவியுள்ளது.

இதைக் கட்டுப்படுத்துவதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு சிறப்புத் திட்டங்களை வகுத்து, அதன்மூலம் நோய்ப் பரவல் குறைக்கப்பட்டிருக்கிறது.இந்தியாவிலேயே,தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும்அதிகரித்துள்ளது.இறப்பு சதவிகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குத்தேவையான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான படுக்கை வசதிகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள்,மருத்துவப் பணியாளர்கள்கூடுதலாகநியமிக்கப்பட்டு,தொற்றினால்பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்விததொய்வும்இல்லாமல்உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                    மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம்கள்      நடத்தப்பட்டு, நோய்அறிகுறிகள்தென்பட்டவர்கள்சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.    மக்களுக்குக்கிடைப்பதற்கான நடவடிக்கையை அரசு செய்து வருகிறது. கட்டுப்பாட்டு பகுதிகளில் வாழ்கின்ற பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப்பொருட்கள்அவர்களுடையவீட்டிற்கேசென்றடையும்அளவிற்குத்தேவையானநடவடிக்கைகள்எடுக்கப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக மாண்புமிகு அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விலையில்லா அரிசி,எண்ணெய், பருப்பு, சர்க்கரை மற்றும் ரூபாய் 1,000 வழங்கப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் 2000 ரூபாயுடன் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய்,வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பணிபுரிந்த வெளிமாநிலத்தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பவேண்டும் என்விரும்பியவர்களை,அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அரசின் செலவிலேயேரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத அளவிற்குஅரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. வேளாண்மைத் தொழிலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் அரசு கவனமாக பார்த்துக் கொண்டதனால் 100 சதவிகிதவேளாண்பணிகள் நடை பெ ற்றது100நாள்வேலைதிட்டத்தில்100சதவிகிதப்பணியாளர்களைஅமர்த்திப்பணிசெய்யக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

இதனால் கிராமப்புற மக்களுடைய வாழ்வாதாரம் எந்தவிதத்திலும் பாதிக்காத அளவிற்கு அரசு பார்த்துக் கொண்டது.அதேபோல,கிராமங்களிலிருந்து நகரம் வரை சுயஉதவி குழுக்களில் உள்ள மகளிர் சுயமாகத் தொழில் தொடங்க தேவையான கடனுதவி எவ்வித தடையுமின்றி வழங்கப்பட்டதனால் மகளிரின் வாழ்வாதாரமும் எந்தவிதத்திலும் பாதிக்காமல் அரசு பார்த்துக்கொண்டது பிற நோய்களினால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதையும் அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.                                                                                                                       

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட குடிநீர் திட்டப் ணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சில பணிகள் முடிவுற்று பயன்பாட்டிற்கு வந்துள்ளன. பல பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு மாவட்டங்களிலும் பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2015-ஆம்ஆண்டு,சென்னையில்  நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டினைத் R  தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டு மாண்புமிகு அம்மாவின் அரசும் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, புதிய தொழில்கள் தொடங்குவதற்கான நடவடிக்கைகளையும்எடுத்திருக்கிறது.இரண்டு மாவட்டங்களிலும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதிகமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் இரண்டு மாவட்டங்களிலுள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊரணிகள் அனைத்தும் தூர்வாருவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட  எண்ணிக்கையிலான ஏரிகளை தேர்வு செய்து, அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, படிப்படியாக இந்தத் திட்டத்தை முழுக்க, முழுக்க விவசாயிகளின் பங்களிப்போடு நிறைவேற்றி வருகிறோம். இது ஒரு அற்புதமான திட்டம். பருவ காலங்களில் பொழிகின்ற மழைநீர் ஒரு சொட்டுகூட வீணாகாமல் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக இந்தத் திட்டத்தை அம்மாவின் அரசு அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.                                                                                                                                                                                                                                                                                    பல ஆண்டு காலமாக தூர்வாரப்படாத ஏரிகளை விவசாயிகள் மூலமாக தூர்வாரி, அதன்மூலம் கிடைக்கின்ற வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துச்  சென்று, இயற்கை உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பையும் கொ டுத்து, அப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மதகுகள் சரி செய்யப்படுகிறது, வரப்பு வாய்க்கால்கள்சுத்தப்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் ஏரிகள் ஆழப்படுவதுடன், மழை நீர் சேமித்து வைக்கப்படுவதால், நிலத்தடிநீர்உயர்ந்துவேளாண்மைமற்றும்குடிப்பதற்குத்தேவையானநீர்கிடைக்கிறது.                                                                                                                                                                               

மழைக்காலங்களில் பொழிகின்ற மழை நீர் வீணாகக் கடலில் கலப்பதை சேமித்து வைப்பதற்கும், நிலத்தடி நீர் உயர்வதற்கு வழிவகை செய்வதற்கும், மூன்றாண்டு காலதிட்டமாக ரூபாய் 1000 கோடி அரசால் ஒதுக்கப்பட்டு, ஓடைகள், நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நீர் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்ற 2 தலைமைப் பொறியாளர்கள், 3 கண்காணிப்புப் பொறியாளர்கள்,என 5 ஓய்வு பெற்ற பொறியாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர், இரண்டாண்டு காலமாக தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு பருவ காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் நீரை சேமித்து வைப்பதற்கு மேற்கொள்ள திட்டங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்கள். அதன் அடிப்படையில்தான் நாங்கள் நிறைய திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். மாண்புமிகு அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள்வைத்த கோரிக்கைகளை ஏற்றுபல்வேறுஇடங்களில்தடுப்பணைகள் கட்டும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது. தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டத்தை நான்காகக் பிரித்து செயலாக்கத்திற்கு எடுத்து, 4-வது திட்டத்திற்கு ரூபாய் 160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணியும் துவங்க இருக்கின்றன. தற்போது நில எடுப்புப் பணி முடியும் தருவாயில் இருக்கின்ற சூழ்நிலையில், 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.                                                                                                                                                                                                                                                                                                            விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டர், விதைகள், உரங்கள் ஆகியவை வழங்கப்படுகிறது. பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படுகின்றன.இப்படிவிவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை இந்த அரசு செய்து கொடுத்து வருகிறது. ,பெரிய வட்டங்களைப் பிரித்து புதிய வட்டங்களை உருவாக்கியிருக்கிறது. சங்கரன்கோவிலில் புதிய கோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆலங்குளம் மற்றும் சங்கரன்கோவில் பகுதிகளில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்க உள்ளன. சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கும் அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள இரண்டு கல்லூரிகளுக்கு தேவையான கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அம்மாவினுடைய அரசைப் பொறுத்தவரைக்கும் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் உயர்ந்திருக்கிறது. 2011-ஆம் ஆண்டு மாண்புமிகு புரட்சித் தலைவிஅம்மாஅவர்கள்பொறுப்பேற்கின்றபொழுது 100-க்கு 32 மாணவர்கள் உயர்கல்வி படித்துக்கொண்டிருந்தார்கள். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவினுடைய காலத்திலும், அம்மாவினுடைய அரசு தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளை உருவாக்கிய காரணத்தினால், குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட உயர்கல்வி படிக்கக்கூடிய நிலை உருவாகி, தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாகஉயர்ந்திருக்கிறது. இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகம் தான் உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் தரமான கல்வி அளிக்க வேண்டும் என்பதற்காக புதிதாக ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றை உருவாக்கி, கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படி மாண்புமிகு அம்மாவின் அரசு எல்லா துறைகளுக்கும் முன்னுரிமை வழங்கி தேவையான நடவடிக்கை எடுத்ததன் விளைவாக தமிழக மக்களின் பொருளாதார நிலைஉயர்ந்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டவிரும்புகிறேன். கொரோனா வைரஸ் கண்ணுக்குத் தெரியாத வைரஸ், ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவக்கூடியது. இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுவிட்டால், சிலருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை கூட உருவாகிறது. இவைகளை பொதுமக்கள் கருத்தில் கொண்டு அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இ-பாஸ் முறையில் சிரமம் ஏற்படுவதாக பலர் தெரிவித்திருக்கின்றனர். இ-பாஸ் வழங்குவதற்கு ஏற்கனவே மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஒரு குழு இயங்கி வருகிறது. இ-பாஸ் உடனடியாக கிடைக்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக மற்றொரு குழு அமைக்கப்பட்டு, இப்பொழுது 2 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மக்கள், அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் உடனடியாக வழங்குவதற்குண்டான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இ-பாஸ் வழங்குவதற்கு எளிமையான முறையை கடைபிடிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.                                                                                              

அரசைப் பொறுத்தவரை மக்கள் தான் முக்கியம். மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது அரசினுடைய தலையாய கடமை. குடிநீர், கல்வி, சாலைகள் வசதி மற்றும் மருத்துவ வசதி போன்றவற்றை சிறப்பான முறையில் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அண்மையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை ரூபாய் 150 கோடி செலவில், ஏழு தளங்களுடன் 330 படுக்கை வசதியுடன் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பதைத் தெரிவிக்கவிரும்புகிறேன்.அதுமட்டுமல்லாமல், இந்த மருத்துவக் கல்லூரியில், ஏற்கனவே 150 மாணவர்கள் ஆக்ஷக்ஷளு பயின்று வந்தார்கள். இப்பொழுது கூடுதலாக100இடங்கள்தோற்றுவிக்கப்பட்டு,தற்போது250மாணவர்கள்ஆக்ஷக்ஷளு மருத்துவப் படிப்புமேற்கொள்ளும் நிலையை அம்மாவின் அரசு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். அதேபோல, துஐஊஹநிதியுதவின்கீழ்,திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூபாய் 10 கோடி செலவில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும், கண்டியப்பேரி அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 20.01 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டுவதற்கும், அதிநவீன உபகரணங்கள் வாங்குவதற்கும், மொத்தம் ரூபாய் 51.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியவர்கள்தனியார்மருத்துவமனைகளில் அதிக கட்டணம் செலுத்தி சிகிச்சை பெற முடியாத சூழலை மாற்றி, அரசு மருத்துவமனைகளில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான கருவிகளை நிறுவி வருகிறோம். அந்த வகையில், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் ரூபாய் 21 கோடி செலவில் புற்றுநோய் சிசிச்சை அளிக்க அதிநவீன டுiநேயச ஹஉஉநடநசயவடிச கருவி வெகு விரைவில் நிறுவப்படவுள்ளது. இந்த வகையில் எல்லாம், மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அம்மாவின் அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் 


கருத்துகள்