சமூக வலை தளங்களில் அமைதிக்கு பங்கம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்



    

இன்று முழு ஊரடங்கை அமல்படுத்தும் காவல்துறையினரின் பணியை தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு - சமூக வலைதளங்களில் ஜாதி, மதக் கலவரத்தையோ, பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்தியையோ பரப்புவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என மாவட்ட எஸ்.பி  எச்சரிக்கை. 


கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (23.08.2020) ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையின் முழு ஊரடங்கு பணியினை தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று ஆய்வு செய்தார். 


 அந்த ஆய்வின்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே செல்லும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும் என்றும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்பை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், இவற்றை கடைபிடிப்பதன் மூலம் நாம் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எளிதில் விடுபடலாம் எனவும் தெரிவித்தார். 


மேலும் தேவையில்லாமல் ஊரடங்கு நேரத்தில் சுற்றித்திரிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுவரை 7981 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9436 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இது வரை 3529 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3459 வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 70 வாகனங்களும் விரைவில் ஒப்படைக்கப்படும் என்றும்,  


 தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சுமார் 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் மட்டும் சுமார் 26 இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது என்றும்,


தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல், விற்பனைகளை தடுப்பதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 34 எதிரிகள் கைது செய்யப்பட்டு, 27 கிலோ கஞ்சா, திருச்செந்தூரில் 25 கிலோ ‘சரஸ்” என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் அறவே இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றும், போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் ஜாதி, மதக்கலவரத்தை தூண்டும் வகையிலோ அல்லது பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ.;.ஜெயக்குமார்அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்.  போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.


இன்று ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களை நிறுத்தி, அவர்கள் வெளியே வந்ததற்கான காரணங்களை கேட்டறிந்து, அவர்களுக்கு கொரோனா ரைவரஸ் தாக்கம் பற்றியும், அதனை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கபசுரக்குடிநீர் வழங்கினார்.


தூத்துக்குடி மத்திய பாகம் காவல் ஆய்வாளர் திரு. ஜெயப்பிரகாஷ், காவல்துறை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர் திரு. ராஜாமணி உட்பட பல காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர். 

கருத்துகள்