முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்பாக பணியாற்றிய. 31 காவல்துறையினருக்கு பாராட்டு

 


       தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம்; சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 31 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

 

கடந்த 17.05.2021 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பண மோசடி செய்து நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த நபரை தேடி கண்டுபிடித்து கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 5 லட்சத்தை கைப்பற்றிய கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிவண்ணன், உதவி ஆய்வாளர் திரு. அரிகண்ணன், முதல் நிலை காவலர் திரு. நாகராஜ், காவலர் திரு. பாலமுருகன், ஊர்காவல் படை காவலர் திரு. ஆறுமுக சங்கர் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,


கடந்த 19.05.2021 அன்று எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த மினி லாரியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை இருப்பதை கண்டறிந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான அவற்றை பறிமுதல் செய்து, 2 எதிரிகளை கைது செய்த எட்டையாபுரம் காவல்நிலைய ஆய்வாளர் திரு. ஜின்னா பீர்முகமது, உதவி ஆய்வாளர் திரு. பொன்ராஜ், தலைமை காவலர்கள் திரு. காமாட்சி, திரு. செல்லச்சாமி, காவலர் திரு. லட்சுமி நாராயணன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,


கடந்த 18.05.2021 அன்று குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடன்குடி சந்தை பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதிக்க வைத்திருந்த 29 மதுபான பாட்டில்கள் மற்றும் மதுபானம் விற்பனை செய்து வைத்திருந்த ரூபாய் 2,23,030ஃ- பணத்தையும் கைப்பற்றி இரண்டு எதிரிகளை கைது செய்த குலசேகரப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மங்கையற்கரசி, திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுந்தரம், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் திரு. ராஜ்குமார், ஆத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு. இசக்கியப்பன், திருச்செந்தூர் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திரு. சொர்ணராஜ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,


கடந்த 15.05.2021 அன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி வள்ளுவர் நகரில் சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்த 8 எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 45,000ஃ- பணத்தை பறிமுதல் செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மாதவராஜா, காவலர்கள் ராம்சுந்தர், திரு. கருப்பசாமி, தனிப்பிரிவு காவலர் திரு. அருண் விக்னேஷ் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,


கடந்த 22.05.2021 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த வீரபுத்திரன் மகன் ஜெயகண்ணன் என்பவர் சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 297 மதுபாட்டில்களை கைப்பற்றி எதிரிகள் ஜெகணேஷ் மற்றும் சங்கு கணேசன் ஆகியோரை கைது செய்த தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. வேல்ராஜ், திரு. சிவக்குமார் தலைமைக் காவலர் திரு. பென்சிங், தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய முதல் நிலைக் காவலர் திரு. மாணிக்கராஜ், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திரு. சாமுவேல், வடபாக காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திரு. மகாலிங்கம், தென்பாக காவல் நிலைய காவலர்கள் திரு. செந்தில், திரு. திருமணி, முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் திரு. முத்துபாண்டி ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்

   

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த 66 வழக்குகளில் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 1, நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்க செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமைக் காவலர்கள் திருமதி. சத்தியபாமா, திரு. சிவக்குமார், திரு. கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்


3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 31 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்