முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்




தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம் 

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில் ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

---------------------


தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.23.04 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மரு.கி. செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: 


தூத்துக்குடி மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 2812 எக்டேர் பரப்பளவிற்கு ரூ.23.04 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் 1 ஏக்கர் முதல் அதிகபட்சம் 5 ஏக்கர் வரை பயன்பெறலாம். இதர விவசாயிகள் 12.5 ஏக்கர் வரை நிலத்தில் சொட்டுநீர் பாசம் அமைத்துக்கொள்ளலாம். நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஆழ்துறை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம், டீசல் மோட்டார் அல்லது மின் மோட்டார் அமைத்திட ரூ.15 ஆயிரம், ஆழ்துளை கிணற்றில் இருந்து நீரை எடுத்து வருவதற்கு குழாய்கள் அமைத்திட ரூ.10 ஆயிரம், தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்திட ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

நுண்ணீர் பாசனத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் இந்த துணை நீர்; மேலாண்மை சிறப்பு திட்டத்திலும் இணைந்து கொள்ளலாம். கணிணி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நிலவரைபடம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3, தாசில்தாரிடமிருந்து பெறப்பட்ட சிறு,குறு விவசாயி சான்று அட்டை, நீர்-மண் பரிசோதனை அட்டை, வங்கிகணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் அலுவலகத்தில் கொடுத்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு:

திருச்செந்தூர், தோட்டக்கலை உதவி இயக்குநர் (9092861549),                         கயத்தார், தோட்டக்கலை உதவி இயக்குநர் (9791577112), விளாத்திகுளம், தோட்டக்கலை உதவி இயக்குநர் (9600342052), கருங்குளம்;, தோட்டக்கலை உதவி இயக்குநர் (8122197540), சாத்தான்குளம்;, தோட்டக்கலை உதவி இயக்குநர் (7639516199), தூத்துக்குடி, தோட்டக்கலை உதவி இயக்குநர் (6374275754), ஸ்ரீவைகுண்டம், தோட்டக்கலை உதவி இயக்குநர் (8807653887), ஆழ்வார்திருநகரி, தோட்டக்கலை உதவி இயக்குநர் (8807653887), புதூர், தோட்டக்கலை உதவி இயக்குநர் (9750549687), கோவில்பட்டி, தோட்டக்கலை உதவி இயக்குநர் (9750549687), ஒட்டப்பிடாரம், தோட்டக்கலை உதவி இயக்குநர், (9976531000), உடன்குடி, தோட்டக்கலை உதவி இயக்குநர், (9092861549). 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்