முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணியாச்சி கிருஷ்னா நகர் பகுதியில் 10.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டிட திறப்பு. .




தூத்துக்குடி மாவட்டம் கே.மணியாச்சி கிருஷ்ணா நகர் பகுதி நேர நியாய விலைக்கடைக்கு ரூ.10.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தினை

மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் திறந்து வைத்தார். 

-----------------

தூத்துக்குடி மாவட்டம் கே.மணியாச்சி கிருஷ்ணா நகர் பகுதி நேர நியாய விலைக்கடைக்கு ரூ.10.35  லட்சம் மதிப்பில் கdட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (30.06.2021) நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தினை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார். இவ்விழாவில் கோவில்பட்டி சட்;டமன்ற உறுப்பினர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் முன்னிலை வகித்தார்.                                                                          


பின்னர் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தெரிவித்ததாவது:

மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்குபட்ட கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள பகுதி நேர நியாய விலைக்கடைக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாளைய தினம் 5000 நபர்களுக்கு தடுப்பூசிகள் வரப்பெற்று உடனடியாக போடப்பட உள்ளது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சீரிய நடவடிக்கைகளால் கொரோனா படிப்படியாக குறைந்துள்ளது. நமது மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 48, 46 என குறைந்துள்ளது. கொரோனா பரவல் குறைந்துள்ளதால் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து மக்கள் ஓரளவிற்கு சகஜ வாழ்க்கைக்கு திரும்பி உள்ளார்கள். அரசின் திட்ட பணிகளும் ஒவ்வொரு பகுதியிலும் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.                                                                                                     

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திரு.ரவிசந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அபுல்காசிம், வட்டாட்சியர்கள் திருமதி.அமுதா, திரு.மணிகண்டன், கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.கஸ்தூரி சுப்புராஜ், முக்கிய பிரமுகர்கள் திரு.ஜெகன்பெரியசாமி, திரு.ஆனந்தசேகரன், திரு.கருணாநிதி, திரு.முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சீனிவாசன், திரு.பாலசுப்பிரமணியன், மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் திரு.வேல்ராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...